முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலசந்திரனும் புலிகளின் குழந்தைப் போராளிகளும்


புலிகள் குழந்தைப் போராளிகளை பயன்படுத்தியது குறித்து ஒரு கட்டுரை இன்றைய இந்துவில் வந்துள்ளது. சிங்ளப்படையினர் பாலசந்திரனை கொன்றதை கண்டிக்கும் போது மேற்சொன்ன புலிகளின் தவறையும் நினைத்துக் கொள்வோம் என்கிறார் ஆசிரியர். 


பொதுவாக இன்று இன/மத அழித்தொழிப்புகள் குறித்த வினா எழுப்பப்படும் போது மறுதரப்பு எய்கிற மாமூல் ஆயுதம் இது: நீங்களும் குற்றம் செய்யவில்லையா?

இது ஒரு முட்டாள்தனமான கேள்வி. இரு குற்றங்கள் ஒரு சரியாகி விடாது. தவறு என்றுமே தவறு தான். 
 
புலிகள் செய்தது தவறென்பதை நாம் மறுக்கப் போவதில்லை. ஆனால் அத்தவறுக்கு பதில் கூற அவர்கள் உயிருடன் இல்லை. அவர்களை குற்றவாளிக் கூண்டில் நாம் ஏற்ற முடியாது.  ஆக, அதைப் பற்றி இனி பேசுவதிலும் பொருளில்லை. 

சிங்களப்படை தளபதிகளும் ராகபக்‌ஷேவும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தாக வேண்டும். இது மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் சம்மந்தப்பட்ட ஒரு பிரச்சனை. முன்பு ஜெயலலிதா கூறியது போல சிலர் போர்க்குற்றங்கள் தவிர்க்க முடியாதவை என இதற்கு நியாயம் பேசுகிறார்கள். ஆனால் உலகம் முழுக்க போர்க்குற்றங்களுக்கு தலைவர்களும், ஜனாதிபதிகளும், தளபதிகளும் பதில் சொல்லி தண்டனை அனுபவித்தே இருக்கிறார்கள். யாரும் இதுவரை உலக சமூகத்தால் மன்னிக்கப்பட்டது இல்லை. ராஜபக்‌ஷேவும் ஒரு நாள் தன் பாவங்களை கழுவி ஆக வேண்டும்.

சமீபத்தில் என்னுடைய முகநூலில் காவிப்படையினர் ஏவிய மும்பை கலவரத்தைப் பற்றின காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தேன். அதற்கு என் இளம்பருவ நண்பன் ஒருவன் “கூட கோத்ரா வன்முறை படங்களையும் நீ பகிர்ந்து பாரேன்” என்று குறுந்தகவல் அனுப்பி இருக்கிறான். கோத்ரா உண்மையில் ஒரு மதவாத தாக்குதால் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மும்பையில் அப்பாவி மக்களை பா.ஜ.க கொன்றதை கோத்ராவால் நியாயப்படுத்த முயல்வது படு அபத்தம். ஒரு விவாதத்தில் கண்ணுக்கு கண் கேட்பவர்கள் ஒரு பண்பட்ட நாட்டில் வாழும் தகுதி அற்றவர்கள்.

சுருக்கமாக, புலிகளுக்கும் ராஜ பக்‌ஷேவின் மனித உரிமை மீறல்களுக்கும் சம்மந்தமில்லை. புலிகள் ஆயிரம் குற்றங்கள் செய்திருந்தாலும் இலங்கை தன் கழுத்தை பலி பீடத்தில் வைத்து தான் ஆக வேண்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.