முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலசந்திரனும் புலிகளின் குழந்தைப் போராளிகளும்


புலிகள் குழந்தைப் போராளிகளை பயன்படுத்தியது குறித்து ஒரு கட்டுரை இன்றைய இந்துவில் வந்துள்ளது. சிங்ளப்படையினர் பாலசந்திரனை கொன்றதை கண்டிக்கும் போது மேற்சொன்ன புலிகளின் தவறையும் நினைத்துக் கொள்வோம் என்கிறார் ஆசிரியர். 


பொதுவாக இன்று இன/மத அழித்தொழிப்புகள் குறித்த வினா எழுப்பப்படும் போது மறுதரப்பு எய்கிற மாமூல் ஆயுதம் இது: நீங்களும் குற்றம் செய்யவில்லையா?

இது ஒரு முட்டாள்தனமான கேள்வி. இரு குற்றங்கள் ஒரு சரியாகி விடாது. தவறு என்றுமே தவறு தான். 
 
புலிகள் செய்தது தவறென்பதை நாம் மறுக்கப் போவதில்லை. ஆனால் அத்தவறுக்கு பதில் கூற அவர்கள் உயிருடன் இல்லை. அவர்களை குற்றவாளிக் கூண்டில் நாம் ஏற்ற முடியாது.  ஆக, அதைப் பற்றி இனி பேசுவதிலும் பொருளில்லை. 

சிங்களப்படை தளபதிகளும் ராகபக்‌ஷேவும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தாக வேண்டும். இது மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் சம்மந்தப்பட்ட ஒரு பிரச்சனை. முன்பு ஜெயலலிதா கூறியது போல சிலர் போர்க்குற்றங்கள் தவிர்க்க முடியாதவை என இதற்கு நியாயம் பேசுகிறார்கள். ஆனால் உலகம் முழுக்க போர்க்குற்றங்களுக்கு தலைவர்களும், ஜனாதிபதிகளும், தளபதிகளும் பதில் சொல்லி தண்டனை அனுபவித்தே இருக்கிறார்கள். யாரும் இதுவரை உலக சமூகத்தால் மன்னிக்கப்பட்டது இல்லை. ராஜபக்‌ஷேவும் ஒரு நாள் தன் பாவங்களை கழுவி ஆக வேண்டும்.

சமீபத்தில் என்னுடைய முகநூலில் காவிப்படையினர் ஏவிய மும்பை கலவரத்தைப் பற்றின காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தேன். அதற்கு என் இளம்பருவ நண்பன் ஒருவன் “கூட கோத்ரா வன்முறை படங்களையும் நீ பகிர்ந்து பாரேன்” என்று குறுந்தகவல் அனுப்பி இருக்கிறான். கோத்ரா உண்மையில் ஒரு மதவாத தாக்குதால் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மும்பையில் அப்பாவி மக்களை பா.ஜ.க கொன்றதை கோத்ராவால் நியாயப்படுத்த முயல்வது படு அபத்தம். ஒரு விவாதத்தில் கண்ணுக்கு கண் கேட்பவர்கள் ஒரு பண்பட்ட நாட்டில் வாழும் தகுதி அற்றவர்கள்.

சுருக்கமாக, புலிகளுக்கும் ராஜ பக்‌ஷேவின் மனித உரிமை மீறல்களுக்கும் சம்மந்தமில்லை. புலிகள் ஆயிரம் குற்றங்கள் செய்திருந்தாலும் இலங்கை தன் கழுத்தை பலி பீடத்தில் வைத்து தான் ஆக வேண்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.