முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீயா நானாவில் சிவகாமி


பெண் உயரதிகாரிகள் பற்றின நீயா நானாவில் சிவகாமி அருமையாக பேசினார். அவர் சொன்னதில் என்னைக் கவர்ந்தவை:


1. பெண்கள் இரட்டை வாழ்க்கை வேண்டி இருக்கிறது. வீட்டில் அடிமை. வேலையிடத்தில் உயரதிகாரி. ஆண்களுக்கு நேர்மாறாக நடக்கிறது. விளைவாக முரண்பாடுகள் தோன்றுகின்றன

2. பெண்கள் ஒரு வேலையை நேரத்துக்கு செய்து முடிப்பதில் மிகையான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கீழ்நிலை பணியாளர்கள் செய்யாவிட்டால் திட்டி டென்ஷன் பார்ட்டி என பெயர் வாங்குகிறார்கள்

3. அவர்கள் விமர்சனத்தை தாங்கும் பக்குவம் இல்லாமல் இருக்கிறார்கள். உம்மென்றால் அழுது விடுகிறார்கள். இந்த பயம் தான் அவர்களிடம் கோபத்தை உண்டு பண்ணுகிறது.


4. அதிகாரத்துக்கு அனுசரணையாக இருக்க தலைப்படுகிறார்கள். இதுவும் உயரதிகாரியாக அவர்கள் காட்டும் இறுக்கத்துக்கு காரணம்.


5. இந்தியர்கள் இயல்பில் படிநிலை உணர்வு மிக்கவர்கள். அவர்களால் ஒரு குழுவில் கூட்டாக வேலை செய்வது கடினம். உயரதிகாரியை பெயர் சொல்லி அழைப்பது, அவர் முன் அமர்வது எல்லாம் தவறு என இன்றும் நம்புகிறார்கள்.

பெண்கள் இளவயதில் இருந்தே இப்படி படிநிலைக்கு பழக்கப்படுத்தப்படுவதால் அவர்கள் அலுவலகத்தில் சகஜமாக பழக சிரமப்படுகிகிறார்கள்.
 

 5. இதையெல்லாம் மாற்ற முதலில் நிறுவனங்கள் தொழிலாளர் நலனில் ஆர்வம் காட்டி லாபமே முழுமுதல் நோக்கு எனும் நிலையை மாற்ற வேண்டும்.
 

சிவகாமிக்கு வாழ்த்துக்கள்! எனக்கு அவர் மீதிருந்த மரியாதை பன்மடங்காகி விட்டது. மேலும் பல பெண்கள் அவரை ஒரு முன்மாதிரியாக கொண்டு உணர்ச்சிவசப்படாமல் தர்க்கரீதியாக அறிவார்த்தமாக யோசிக்க துவங்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.