முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரு உரையாடல்கள்





அரசி: “என்ன இன்னிக்கு தொண்டர்கள் கூட்டம் ரொம்ப ஓவரா இருக்கே”

விதூஷகன்: “இவர்களெல்லாம் கடந்த மூன்று வருடங்களில் நீங்கள் டிஸ்மிஸ் செய்த மந்திரிகள், நிர்வாகிகள் அரசி. பிழைக்க வழியில்லாமல் மீண்டும் உங்களை நாடி வந்திருக்கிறார்கள். பாவம் எதிர்க்கட்சியில கூட சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க”

அரசி: “எதிர்க்கட்சியா? அப்பிடி ஒரு கட்சியே கிடையாதே”

விதூஷகன்: “ஆமாம் அரசி. அதனால் தான் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்.”

அரசி: ”ம்ம்ம் பாவமாத் தான் இருக்கு. என்ன பண்ணலாம்”

விதூஷகன்: “அரசி, நம் யானைகள் காப்பகத்தில் சோற்று உருளைகளை உருட்டுகள் வேலைகள் காலியாக உள்ளன. இவர்களை அதற்கு நியமிக்கலாமா? இல்லாட்டி அம்மா காண்டீன்ல அரிசியில கல்லு பொறுக்க அனுப்பலாம்.”

அரசி: “இவனுங்களுக்கு ஒழுங்கா ஒரு சேலை மடிக்க தெரியாது. துரத்து எல்லாரையும். ஒருத்தனும் எம்முன்னே நிக்கக் கூடாது”

 


***********************************************************************************************************
தலைவர் மகன் 1: “எங்க போனாலும் குடும்ப ஆட்சி குடும்ப ஆட்சின்னு காதை கடிக்கிறாங்க”
தலைவர் மகன் 2: “எனக்கும் அதே பிரச்சனை தான்.”
தலைவர் மகன் 1: “ஆனால் என் குடும்பமே கட்சி தான். எங்க அப்பாவை நான் தலைவர்னு தான் கூப்பிடுவேன் தெரியுமா”
தலைவர் மகன் 2: “எங்க அம்மாவை நான் மாதாஜீன்னு தான் கூப்பிடுவேன்”
தலைவர் மகன் 3: “ஹா ஹா ஹா அப்பனாவது மகனாவது. எனக்கே பேரன் பொறந்தாச்சு. ஆனால் என் அப்பன் நான் அவருக்கு புள்ளையில்லைங்கிறாரு. ஹா ஹா. வாழ்க்கையே பித்தலாட்டம்”
தலைவர் மகன் 2: “ஏதோ ஒரு சத்தம் கேட்டுதில்ல.”
தலைவர் மகன் 1: “இல்லியே. (தொடர்ந்து) சினிமாவில, வியாபாரத்தில, தொழில்ல, ஏன் மதத்துல கூட குடும்ப ஆட்சி இல்லியா? குடும்ப ஆட்சின்னு திட்டுற விஜயகாந்த் அவர் புள்ளைய வச்சு சினிமா எடுக்கலியா? திருபாய் அம்பானி சொத்தை அனிலும் முகேஷும் ஆளலியா? உண்மையில பிரச்சனை அது இல்ல. குடும்பத்தில பல பேர் ஆட்சியில பங்கு கேட்குறாங்க. அதை மக்கள் ஏத்துக்கல. அதனால தான் இந்த தேர்தல்ல துவைச்சு எடுத்துட்டாங்க. ஆனா ஒண்ணு நீ ரொம்ப அதிர்ஷ்டசாலிப்பா. ஒரு அக்கா, அவங்களால உனக்கு எந்த ஆபத்துமில்ல”
தலைவர் மகன் 3: “ஹா ஹா”
தலைவர் மகன் 2: “யாரோ சிரிக்கிற மாதிரி கேட்டுதில்ல.”
தலைவர் மகன் 1: “கேட்காத மாதிரி இருந்துக்கோ. போக போக பழகிரும்.”



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...