முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரு உரையாடல்கள்





அரசி: “என்ன இன்னிக்கு தொண்டர்கள் கூட்டம் ரொம்ப ஓவரா இருக்கே”

விதூஷகன்: “இவர்களெல்லாம் கடந்த மூன்று வருடங்களில் நீங்கள் டிஸ்மிஸ் செய்த மந்திரிகள், நிர்வாகிகள் அரசி. பிழைக்க வழியில்லாமல் மீண்டும் உங்களை நாடி வந்திருக்கிறார்கள். பாவம் எதிர்க்கட்சியில கூட சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க”

அரசி: “எதிர்க்கட்சியா? அப்பிடி ஒரு கட்சியே கிடையாதே”

விதூஷகன்: “ஆமாம் அரசி. அதனால் தான் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்.”

அரசி: ”ம்ம்ம் பாவமாத் தான் இருக்கு. என்ன பண்ணலாம்”

விதூஷகன்: “அரசி, நம் யானைகள் காப்பகத்தில் சோற்று உருளைகளை உருட்டுகள் வேலைகள் காலியாக உள்ளன. இவர்களை அதற்கு நியமிக்கலாமா? இல்லாட்டி அம்மா காண்டீன்ல அரிசியில கல்லு பொறுக்க அனுப்பலாம்.”

அரசி: “இவனுங்களுக்கு ஒழுங்கா ஒரு சேலை மடிக்க தெரியாது. துரத்து எல்லாரையும். ஒருத்தனும் எம்முன்னே நிக்கக் கூடாது”

 


***********************************************************************************************************
தலைவர் மகன் 1: “எங்க போனாலும் குடும்ப ஆட்சி குடும்ப ஆட்சின்னு காதை கடிக்கிறாங்க”
தலைவர் மகன் 2: “எனக்கும் அதே பிரச்சனை தான்.”
தலைவர் மகன் 1: “ஆனால் என் குடும்பமே கட்சி தான். எங்க அப்பாவை நான் தலைவர்னு தான் கூப்பிடுவேன் தெரியுமா”
தலைவர் மகன் 2: “எங்க அம்மாவை நான் மாதாஜீன்னு தான் கூப்பிடுவேன்”
தலைவர் மகன் 3: “ஹா ஹா ஹா அப்பனாவது மகனாவது. எனக்கே பேரன் பொறந்தாச்சு. ஆனால் என் அப்பன் நான் அவருக்கு புள்ளையில்லைங்கிறாரு. ஹா ஹா. வாழ்க்கையே பித்தலாட்டம்”
தலைவர் மகன் 2: “ஏதோ ஒரு சத்தம் கேட்டுதில்ல.”
தலைவர் மகன் 1: “இல்லியே. (தொடர்ந்து) சினிமாவில, வியாபாரத்தில, தொழில்ல, ஏன் மதத்துல கூட குடும்ப ஆட்சி இல்லியா? குடும்ப ஆட்சின்னு திட்டுற விஜயகாந்த் அவர் புள்ளைய வச்சு சினிமா எடுக்கலியா? திருபாய் அம்பானி சொத்தை அனிலும் முகேஷும் ஆளலியா? உண்மையில பிரச்சனை அது இல்ல. குடும்பத்தில பல பேர் ஆட்சியில பங்கு கேட்குறாங்க. அதை மக்கள் ஏத்துக்கல. அதனால தான் இந்த தேர்தல்ல துவைச்சு எடுத்துட்டாங்க. ஆனா ஒண்ணு நீ ரொம்ப அதிர்ஷ்டசாலிப்பா. ஒரு அக்கா, அவங்களால உனக்கு எந்த ஆபத்துமில்ல”
தலைவர் மகன் 3: “ஹா ஹா”
தலைவர் மகன் 2: “யாரோ சிரிக்கிற மாதிரி கேட்டுதில்ல.”
தலைவர் மகன் 1: “கேட்காத மாதிரி இருந்துக்கோ. போக போக பழகிரும்.”



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.