முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்நிய நிலத்தில் அந்நியமாய் இருந்தேன் - ரீத்தா டோவ் (தமிழில் ஆர்.அபிலாஷ்)



வாழ்வின் வசியம் அதிஅற்புதமானது என்பதாலே அதை முறியடிக்க அனைத்தும் முயன்றபடி இருக்கின்றன – எமிலி டிக்கின்ஸன்


அது பேருவகை அல்ல. சாதாரண வாழ்க்கையை தவிர்த்து எது தான் பேருவகை சொல்லுங்கள்? மெல்ல தட்டி ஓசைகள் எழுப்பியபடி
மணிக்கணக்காய் செலவழிப்பாள், நாள் முழுதும் கழித்தாள்
தொட்டும் நுகர்ந்தும் சுவைத்தும்...

மகிழ்ச்சியில் சிறைவைக்கப்பட்ட ஒரு உலகில் அதி அற்புதமான வீட்டுவேலைகள்
ஆனால் எப்போதும் அவை அநேகமாய் ஒன்று போலவே தோன்றின
அந்த மகிழ்ச்சியும், இலக்கற்ற அங்கேயே இருத்தலும்.


ஆகையால் அவள் சற்று நேரம் அலைந்தாள், புதரில் இருந்து தோட்டத்துக்கு நிழலுக்கு,
ஒரு குளத்தின் அமைடியற்ற கண்ணாடியில் தன்னை நோக்க தாமதிப்பாள்.
அவர் பிரபஞ்சத்தை பட்டியலிட சென்றிருப்பார், ஒருவேளை,
யாரோ இன்னொருவரின் பெருங்குழப்பத்தை தன்னால் சீராய் தொகுக்க முடியும் என்று பாசாங்கு செய்தபடி.

அப்போது தான் அம்மரத்தை கண்டுபிடித்தாள்
அப்படி ஒரு பேச்சற்ற பொக்கிஷத்தை சுமந்த
கரணைகள் கொண்ட அதன் கரிய கிளைகளை,
சொல்லாமலே அவளுக்கு தெரியும்
அது தடைசெய்யப்பட்டது என. அது
உரிமை சம்மந்தப்பட்ட பிரச்சனை அல்ல –
இவ்வளவு உன்மத்தமான கச்சிதத்திற்கு
யாரால் உரிமை கோர முடியும்?

அவள் கபாலத்துக்குள் எந்த ஓசையும் எழவில்லை
அந்த இலைகளுக்குள் ஒளிந்திருந்து எந்த கூர்மதியும் கிசுகிசுக்கவில்லை – வெறுமனே ஒரு வலி தான், அது வளர்ந்த போது
அவள் இழந்து விட்டிருந்தாள் எல்லாவற்றையும்
ஆசையைத் தவிர, தன் நீட்டிய உள்ளங்கையில் வெதுவெதுப்பாய் இருந்த
அந்த சிவப்பு பாரத்தைத் தவிர

-     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.