முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அலி முர்த்தாஸா: கவனிக்க வேண்டிய சுழலர்


நேற்று செண்டிரல் மற்றும் சவுத் ஸோன் அணிகள் இடையிலான துலீப் கோப்பை போட்டியின் இறுதி நாள். சவுத் ஸோனுக்கான வெற்றி இலக்கு 301. அவர்கள் 203க்கு ஒரு விக்கெட் இழந்திருந்தனர். ஆனால் பின்னர் விக்கெட்களை வேகமாய் இழந்து சொற்ப எண்களில் ஆட்டம் இழந்தனர். மிக பரபரப்பான ஆட்டமாக இருந்தது. நேற்றைய இந்திய-இலங்கை ஒருநாள் ஆட்டத்தை விட சுவாரஸ்யமான ஆட்டம். அலி முர்த்தாஸா எனும் இடது கை சுழலரை ஐ.பி.எல்லில் பார்த்திருப்பீர்கள். ரொம்ப தட்டையாக ஆனால் கூர்மையாக வீசுவார். எனக்கு அவரை இதனாலே பிடிக்காது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அவர் மிக அழகாக வீசினார். ஒவ்வொரு பந்தையும் பிளைட் செய்தார். காற்றில் மிதக்க செய்தார். கையில் இருந்து நேர் கீழாக பந்தை விழ வைக்காமல் சில இஞ்சுகள் கைக்கு மேலே எழ விட்டு சுழன்று மட்டையாளனை நோக்கி வரச் செய்தார். இது மட்டையாளனை குழப்பியது. ரொம்பவெல்லாம் இல்லை. கொஞ்சமாக தான் பிளைட் செய்தார். ஆனால் அது போதுமாக இருந்தது. மட்டையாளர்கள் பந்தின் நீளத்தை கணிக்க முடியாமல் திணறினர். 


முர்த்தாஸாவின் பந்து வீச்சு பாணி பாகிஸ்தானிய சுழலர்களை நினைவு படுத்துகிறது. அவரது உடல் மொழியின் வன்மமும் என்னை கவர்ந்தது. இந்த ஆட்டத்தில் அவர் மொத்தமாய் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முர்த்தாஸா உத்தர் பிரதேச அணியை சேர்ந்தவர். ஐ.பி.எல்லில் மும்பை இந்தியன்ஸ், பூனே வாரியர்ஸ் ஆகிய அணிகளுக்கு ஆடியுள்ளார். ஆனால் ஐ.பி.எல்லில் நாம் காணுகிற முர்த்தாஸா அல்ல உள்ளூர் நான்கு நாள் ஆட்டங்களில் காண்பவர். அவர் அம்பி. இவர் அந்நியன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.