முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதவை அடைக்காதே

நான் வழக்கமாய்
திறக்கும் கதவை
அடைக்காதே
அவ்விடத்தில்
பத்து புதிய கதவுகளை
திறப்பேன்
என்னை உதாசீனிக்காதே
தொடர்ந்து நினைவு படுத்தியபடியே இருப்பேன்.
என்னை பார்க்க தவிர்த்தால்
உன் பார்வை படும்
இடமெல்லாம் இருப்பேன்
ஒரு மலையுச்சியின் விளிம்பில் இருந்து
தள்ளி விடப் பார்த்தால்
உன் காலை இறுக
பற்றிக் கொள்வேன்


நாம் பரஸ்பரம் நகர்த்தும்
காய்களின் குறுக்குமறுக்கான நகர்வுகளால்
சதுரங்க பலகை
கலைந்தபடியே இருக்கிறது
காலம் கலைந்த எறும்பு வரிசை போலாக
அடுத்தவர் வாழ்வின்
ஒழுங்கு குலைந்து போகிறது
மனிதர்கள் பாதை கலைந்து
அடுத்தவர் வாசலை திறந்து
தம் வீட்டுக்குள் வருகிறார்கள்
வெற்றியின் பாதைகள் தோல்வியிலும்
தோல்வியின் பாதைகள் வெற்றியிலும்
முடிகின்றன
இன்றுள்ள பல
எழுச்சிகளுக்கும் சீரழிவுகளுக்கும்
பாராட்டுக்கும் கண்டனத்துக்கும்
உள்ளாகிறோம்.
சினிமா சண்டைக்காட்சியில் வரும்
கட்டுப்பாட்டை இழந்த காரைப் போல்
நம் காலத்தை
ஒரு வேடிக்கை காட்சியாக்கி விட்டோம்.

போதும்.
நீ ஒரு திசையில்
இழுக்காதே
நானும் இன்னொரு திசைக்காய்
இழுக்க மாட்டேன்
வகுப்பில் சதா கைகளை பிணைத்துக் கொண்டு
ப்ரியமாய் திரியும் குழந்தைகள்
மணியடித்ததும்
கைகளை விடுவிப்பது போல்
விட்டு விடு
வீட்டுக்கு போயாக வேண்டும்.

மாலையாகி விட்டது
இருட்டிலும் களைப்பிலும்
நிழலுருவங்களாய்
தொலைதூர சதுர ஒளிப்புள்ளிகளை
நோக்கி நிற்கிறோம்.
முதலில்
கையை விடு!
இதோ
பொங்கி வழியும் கோப்பையின்
நீர் போல்
நீ என்னிலிருந்து

அகல்கிறாய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.