முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென்னாப்பிரிக்காவும் உலகக்கோப்பையும்

But Sohail Khan removed de Villiers in the 33rd over and swung the match back in Pakistan's favour

இன்று (7-3-15) நடந்த தென்னாப்பிரிக்கா-பாகிஸ்தான் லீக் போட்டி இந்த உலகக்கோப்பையின் மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்று. பாகிஸ்தான் முதலில் மட்டையாடி 222 அடித்தார்கள். தடுக்கி தடுமாறி கூட அடிந்து விடக்கூடிய எளிய ஸ்கோர். ஆனால் தென்னாப்பிரிக்கா தடுமாறிக் கொண்டே இருந்தார்கள். எழவே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள்.
 ஒன்று ஏழடி உயரமுள்ள முகமது இர்பான், இடதுகை வீச்சாளர்கள் ரகத் அலி, வஹாப் ரியாஸ் ஆகிய மந்திரப் பந்து வீச்சாளர்கள். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சின் தனித்தன்மை அவர்களால் மிகுந்த வேகத்தில் பந்தை ஸ்விங் செய்ய முடியும் என்பது. அவர்கள் நன்றாக வீசத் தொடங்கினால் பாலைவனச் சூறாவளி அடிப்பது போலத் தான். எதிர்த்து நிற்க நீங்கள் திராவிடாகவோ காலிஸாகவோ இருக்க வேண்டும். இன்று தென்னாப்பிரிக்காவை அந்த புயல் அடித்து தூக்கி சென்றது. டிவில்லியர்ஸ் மற்றுமே சற்று நேரம் எதிர்த்து நின்று சுடர்ந்து விட்டு அணைந்து விட்டார்.

தென்னாப்பிரிக்கா ஒவ்வொரு நான்கு ஓட்டங்கள் அடிக்கும் போது பாகிஸ்தான் வேகவீச்சாளர்கள் அஞ்சாமல் தொடர்ந்து விக்கெட்டுக்காக முயன்று கொண்டே இருந்தார்கள். இது ஒரு கண்காணா காட்சி. சன்னதம் வந்தது போன்ற கவனத்துடன், மன ஒழுங்குடன் ஆவேசத்துடன் வீசினார்கள்.
இரண்டாவது காரணம் தென்னாப்பிரிக்காவின் பதற்றம். தோற்று விடுவோமோ என்கிற பயம். ஒரு இலக்கை விரட்டும் போது இரண்டு ஓவர்கள் அவர்களுக்கு எதிராக நன்றாக ஆடினால் சுணங்கி விடுவார்கள். பதற்றத்தில் தடுமாறியபடி ஆடுவார்கள். பிறகு அவர்களுடையது தற்கொலை ஆட்டமாகத் தான் இருக்கும். ஆங்கிலத்தில் choking என்கிறார்கள். இந்த பிரச்சனை தென்னாபிரிக்காவுக்கு முன்னர் முக்கியமான ஆட்டங்களில் மட்டும் இருந்தது. இப்போது லீக் போட்டிகளில் கூட அவர்கள் தம் மீது போடும் கொள்ளும் அழுத்தத்தினால் சோக் ஆக ஆரம்பித்து விட்டார்கள். ஒரே விதிவிலக்கு ஹஷிம் ஆம்லா தான். அவர் பந்தை சொடுக்கி விரட்டும் போது அசருதீன் நினைவுக்கு வருகிறார். பந்து மட்டையில் படும் போது ஒரு தனித்துவமான சத்தம் வரும். இது மணிக்கட்டை சுழற்றி அடிக்கும் மட்டையாளர்களுக்கே உரித்தானது. ஆம்லாவைத் தவிர பிற தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு ஒரு ஜென் மனநிலையுடன் ஆட வரவில்லை. டிவில்லியர்ஸுக்கு கூட. அவரும் பதற்றமானால் அடிக்க ஆரம்பித்து விடுகிறார். இன்றைய ஆட்டத்தில் அவரிடத்தில் தோனி இருந்திருந்தால் ஒற்றை, ரெட்டை ஓட்டங்கள் எடுத்தே வென்றிருப்பார். ஆனால் அவர் நான்காவது கியரில் ஆடி ஆட்டம் இழந்தார்.
டிவில்லியர்ஸ் ஆம்லாவுக்கு இன்னொரு துருவம். ஆம்லாவுக்கு மணிக்கட்டும் டைமிங்கும் பலம் என்றால் இவருக்கு சமநிலையும் அடிக்கும் வலுவும் தனிச்சிறப்பு. முன்பெல்லாம் கால் பக்கமாய் விலகி நின்று பந்தை எங்கு வேண்டுமானாலும் அடித்துக் கொண்டிருந்தார். குச்சியை சுற்றி வந்து round the wicket வீசி அவரை கட்டுப்படுத்த முடிந்தது. இப்போது அம்முறையில் வீசினாலும் அதற்கும் ஒரு உபாயம் வைத்திருக்கிறார். Off குச்சிக்கு வெளியே வெகுவாக தள்ளி நின்று பந்து கால் பக்கமாய் அனாயசமாய் அடிக்கிறார். எப்படி நின்றாலும் அவரது சமநிலை குலைவதில்லை. அதனாலே அவரால் இஷ்டத்துக்கு ஆறு ஓட்டங்கள் அடிக்க முடிகிறது. அவரை இப்போது பார்க்க தொண்ணூறுகளில் சச்சினைப் பார்த்தது போல் இருக்கிறது.
டிவில்லியர்ஸ் இவ்வாறு அங்கும் இங்குமாய் தள்ளி நின்று அடிக்கையில் முழுநீளமோ யார்க்கரோ குட் லெங்தோ உதவாது. Short of the length தான் சரியான உபாயமாக இருக்கும். இன்று சொகைல் கான் அவரை அப்படித் தான் வீழ்த்தினார்.
இன்றைய ஆட்டம் பார்த்த பின்னர் தென்னாப்பிரிக்கா இந்த உலகக் கோப்பையை வெல்லும் எனும் நம்பிக்கை முழுமையாக போய் விட்டது. லீக் ஆட்டத்திலேயே இவ்வளவு கைநடுக்கம் என்றால் கால், அரை இறுதிகளில் அவர்களுக்கு பதற்றத்தில் ஜன்னியே வந்து விடும். தென்னாப்பிரிக்கா ஆடும் போது இரண்டு அணிகளுக்கு எதிராக போராட வேண்டும். ஒன்று எதிரணிக்கு எதிராக. அடுத்து தனக்கு எதிராக.

இம்முறையும் South Africa chokes again எனும் தலைப்பு செய்தி வரும் பாருங்கள். 

கருத்துகள்

Name : Rajesh RV இவ்வாறு கூறியுள்ளார்…
You exactly echoed whatever I felt too. They never tried to build an innings. Every one went to slog. Steyn out was for a wild slog. I felt like " adapavi gala, Intha team thaan world cup win pannumnu Evan data sonathu"
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
கடைசி நேரத்தில் சொதப்பல் நியுஜியும்...?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...