முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டி.வி ஷோவில் இஸ்லாமியர்களை எதிரிகளாய் கட்டமைக்கும் பா.ஜ.க செயல்திட்டம்



நேற்று புதிய தலைமுறையில் எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப அளிப்பது பற்றின நேர்பட பேசு பார்த்தேன். அருமையான விவாதம். குணசேகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிற விதம் பாராட்டத்தக்கது. பா.ஜ.க சார்பில் வந்திருந்த ராமசுப்பிரமணியனுக்கும் மனுஷ்யபுத்திரனுக்குமான சண்டை தான் அல்டிமேட். அதை மிகவும் ரசித்தேன். மனுஷ்யபுத்திரன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு ஒருவரிடம் மோதி பார்த்ததில்லை. பா.ஜ.க சார்பாளருக்கும் ஒருவிதத்தில் இது தேவைப்படுகிறது. அவர்கள் தாம் ஒரு இஸ்லாமியருடன் மோதுகிறோம் எனும் செய்தியை கட்சிக்காரர்களுக்கும் மக்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறார்கள். அதன் மூலம் இந்து – இஸ்லாம் எதிரிடையை இங்குள்ள கருத்துச்சூழலில் நிறுவ விரும்புகிறார்கள்.

 சன் நியூஸ் விவாதத்திலும் ஒரு பா.ஜ.க கட்சிக்காரரிடம் இதை கவனித்தேன். பா.ஜ.கவை மிக மோசமாய் நான் திட்டிய போதும், பிராமணர்களை குற்றம் சாட்டிய போதும் அவர் சாதாரணமாய் எடுத்துக் கொண்டு பதில் சொன்னார். ஆனால் ஒரு முஸ்லீம் நண்பர் அதையே கூறிய போது கொதிப்படைந்து “நாங்க இனி முஸ்லீம்ஸையும் ஓபனா தாக்குவோம்” என்றார். மனுஷ்யபுத்திரனுடன் விவாதிக்கும் போதும் அவர்கள் அடிக்கடி “அப்துல் ஹமீத்” என பெயரை குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது. இது ஒரு திட்டமிட்ட நாடகமோ என தோன்றுகிறது. தமிழக மீடியாவில் பா.ஜ.கவினரை இடதுசாரிகள், மதசார்பற்றவர்கள், முற்போக்காளர்கள் என பலரும் எதிர்க்கிறார்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் விவாதத்தில் எதிர்வரும் போது மட்டும் ஏன் மிகவும் குரோதத்துடனும் வன்மத்துடமும் பேசுகிறார்கள்? இதன் பின் ஒரு தெளிவான திட்டமிடல் உள்ளது. நாம் இதற்கு இரையாகாமல் கவனமாய் இருக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.