முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆப்பிளும் மார்புகளும்

Dear Abilash sir. 
"Kadavul Irukiraraa" is a nice article in Uyirmmai. May god bless you.
The bible says it is tree and we say it is a apple tree. I hope u know this. Kindly make a note of it.
Regards
jerin
நன்றி ஜெரின். ஒரு சின்ன விளக்கம். நீங்கள் சொல்வது சரி தான். அது fig மரம் என்றும் படித்திருக்கிறேன்.
ஆனால் என் கேள்வி இது: விவிலியம் மனிதனால் எழுதப்பட்டது. அது நூற்றாண்டுகளாய் பல சேர்க்கைகளை பெற்று வளர்ந்துள்ளது, மாறி உள்ளது. இன்றுள்ள விவிலியம் மக்கள் தமக்காய் தாமே எழுதிக் கொண்டது. இங்கு தான் ஆப்பிளும் வருகிறது.
ஆப்பிள் ஒரு பிரமாதமான குறியீடு. அதன் சிவப்பும் வழவழவென்ற உருளை வடிவமும் காமத்தின் குறியீடு. ஆபத்தின, அழகின் குறியீடு. அதன் வழியே தான அது் பாவத்தின், விலக்கப்பட்ட செயலின் குறியீடும் ஆகிறது. அதனால் தான் தமிழில் ஏவாள் கடித்தது ஆப்பிள் எனும் எண்ணம் எழுத்தாளர்களிடம் குறிப்பாய் பரவலாய் உள்ளது. வெறும் விலக்கப்பட்ட கனி என்பதை விட ஆப்பிள் எனும் போது ஏற்படும் அகச்சித்திரமும் உணர்வுகளும் தனித்துவமானவை.
தகவலின் சரித்தன்மையா மொழியின் குறியீட்டுத்தன்மையா? எது முக்கியம்?

சமீபத்தில் ஒரு கூட்டத்தில் ஒரு தோழி கோபமாய் கேட்டார்: ஏன் கண்ணகி மார்பை பறித்து எறிந்ததாய் சொல்கிறார்கள்? பெண்களின் அந்த உறுப்பை தவிர்த்து வேறு எதிலும் ஆண்களின் கவனம் செல்லாதா!
பெண்ணிய கோணத்தில் அவர் கேள்வி முக்கியமே. ஆனால் ஒற்றை முலை எனும் சொல் நம் கற்பனையில் தீக்கனலாய் மிளிர்ந்து கொண்டே இருக்கிறது. நூற்றாண்டுகளாய்! எத்தனையோ தாய்களின் கோபத்தை நாம் அந்த சித்திரம் மூலம் மட்டுமே உணர்ந்து கொள்கிறோம். கண்ணகியின் சிலையை ஜெயலலிதா அகற்றிய போது பலர் வெகுண்டெழுந்ததற்கு காரணம் அதில் நம் நூற்றாண்டுகளின் உணர்வுகள் படிந்துள்ளது, அதில் நாம் கண்டுள்ள அநீதியால் கொதிப்புறும் அத்தனை பெண்களையும் கண்டறிந்தோம் என்பதால் தான்.
ஆப்பிளும் மார்புகளும் வெறும் ஆப்பிளும் மார்புகளும் அல்ல.
ஜெரின் உங்கள் அவதானிப்பு சரியே. ஆனால் உணர்வுகளின் தடத்தில் பயணிக்கையில் எழுத்தாளனுக்கு தகவலின் சரித்தன்மையை கடந்து பேசும் சுதந்திரம் உண்டு என நினைக்கிறேன்.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...