முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் முடிவுகள்: ஏமாற்றமும் எதார்த்தமும்


இத்தேர்தல் பற்றி ஒரு மாதத்திற்கு முன்பு என்னிடம் கேட்டிருந்தால் போட்டி கடுமையாக இருக்கும். அதிமுக சராசரியான வெற்றி பெறும். திமுக போதுமான இடங்கள் பெற்று எதிர்க்கட்சியாக மாறும் என கூறியிருப்பேன். ஆனால் ஒரு வாரத்துக்கு முன்பு சட்டென ஒரு எதிர்-அதிமுக அலை கிளம்புவதை கவனித்தேன். எல்லா பத்திரிகை நண்பர்களும் திமுக தான் வெல்லும் என்றார்கள். Exit poll முடிவுகளும் அதையே உறுதிப்படுத்தின. ஆனால் நேற்று எனக்கு சற்று குழப்பமாய் இருந்தது. என் ஊகம் தவறாகுமோ என பட்டது. காரணம் அதிமுகவின் மௌனம். தேர்தலுக்கு முன்பாக இருநாட்களில் அவர்கள் நடத்திய பெரும் பணப்பட்டுவாடா. நேற்றிரவு ஒரு ஊடக நண்பரிடம் பேசினேன். (அவர் ஒரு செய்தி சேனலில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்.) ”என்ன நினைக்கிறீர்கள்?” அவர் சொன்னார் “அதிமுக வெற்றி பெறும். தேர்தலுக்கு சற்றும் முன்பு அவர்கள் விநியோகித்த பெருமள்வு பணம் மக்களின் முடிவை திசைதிருப்பி இருக்க கூடும். ஆனால் திமுக ஒரு வலுவான எதிர்க்கட்சியாய் வெளிவரும்.” அதன் பிறகு அவர் மற்றொரு விசயத்தை ஊகித்தார். அது பா.ம.க ஒரு சிறிய வெற்றியை அடையும் என்பது. அன்புமணி நிறைய இளம் வாக்காளர்களை வசீகரிக்கிறார் என்றார். எனக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது. ஆனால் இப்போது வரைக்கும் பா.ம.க ஐந்து இடங்களில் முன்னிலை வகிப்பது இதை உறுதிப்படுத்துகிறது. அந்த நண்பர் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி தான்.
நேற்று கோட்டூர்புரத்தில் ஒரு ஓட்டலில் உணவருந்தி விட்டு கிளம்பும் போது அதன் உரிமையாளரிடம் தேர்தல் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். “திரும்பவும் அதிமுக வந்தால் அவங்க ரொம்ப ஆட்டம் போடுவாங்க. தட்டிக் கேட்க யாரும் இல்லேன்னு நினைப்பாங்க. அதனாலே அவங்க வரக் கூடாது. மத்தபடி நான் எந்த கட்சி ஆளும் இல்லை” என்றார். நானும் எந்த கட்சியின் அனுதாபியும் அல்ல. அதிமுக மீண்டும் வரக் கூடாது என வெளியில் நின்று விரும்பியவன் நான். அதனால் இத்தேர்தல் முடிவுகள் எனக்கும் ஏமாற்றமே. ஆனாலும் தனிப்பெரும் வெற்றியை மக்கள் அளிக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். திமுகவை ஒரு வலுவான எதிர்க்கட்சியாய் முன்னிறுத்தி இருக்கிறார்கள். கடந்த இரு வருடங்களில் இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் மக்கள் பா.ஜ.கவுக்கு விடுத்த செய்தி போலத் தான் இதையும் பார்க்க வேண்டும். ”நாங்கள் உங்கள் ஆட்சியில் அதிருப்தியாய் இருக்கிறோம். அதனால் ஒரு சிறிய அளவில் தோற்கடிக்கிறோம். ஆனாலும் மற்றொரு வாய்ப்பு தருகிறோம்” என்பதே மக்கள் இப்போது அதிமுகவுக்கு விடுக்கும் எச்சரிக்கை.
மிகப்பெரிய அடி மக்கள் நலக் கூட்டணிக்கு தான். அதிமுகவே இருக்கும் போது அதன் பி அணிக்கு எதற்கு தனியாய் வாக்களிக்க வேண்டும் என மக்கள் நினைத்து விட்டார்கள் போல. மநகூ திமுகவை தாக்கும் முனைப்பை குறைத்து தம்மை உண்மையிலேயே ”மாற்றாய்” முன்வைத்திருக்க வேண்டும். அடுத்தமுறை வை.கோ போன்று காழ்ப்புணர்வு மிக்க ஒரு குழப்பவாதியுடன் கட்சிகள் இணையக் கூடாது. அவர் இக்கூட்டணியின் தொனியையே தவறாக மாற்றி விட்டார். அவர் திமுக தெமுதிகவுக்கு பணம் கொடுத்து இழுக்கப் பார்த்தது என பேசியிராவிட்டால் அவருக்கு அதிமுகவால் கொடுக்கப்பட்ட கோடிகளின் கதை வெளியே வந்திருக்காது.
விஜயகாந்தின் பொழுதுபோக்கு பேச்சை மக்கள் பெருமளவில் ரசித்தார்கள். ஆனால் அவருடைய உடல்நலம், அவர் பேச்சில் உள்ள தடுமாற்றம், குழறல், மேலும் கட்சிக்குள் அவரது நிர்வாகிகள் இடையில் உள்ள் அதிருப்தி என பலவிசயங்கள் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தி இருக்கலாம். வி.சி.க அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. விஜயகாந்துடன் திருமா கைகோர்த்தது அவரது கட்சியினருக்கே அதிருப்தி ஏற்படுத்தி இருந்ததை கவனித்தோம். வி.சி.க இப்போதைக்கு தன்னை திராவிட கட்சிகளுக்கு மாற்றாக முன்வைக்காமல் வேர்களுக்கு திரும்புவதும், மக்களோடு தோள்கொடுத்து பணியாற்றுகிற தலைவர்களை உருவாக்குவதும் முக்கியம்.


அடுத்த தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு இவ்வளவு கருணை காட்ட மாட்டார்கள்! 

கருத்துகள்

KARMA இவ்வாறு கூறியுள்ளார்…
கருணாநிதி குடும்பம் ஆடாத ஆட்டமா ???
எவ்வளவு துரோகம் ?

மதுவிலக்கு - நாடகம்
மீதேன்
ஈழம் - நாற்காலியை பிடித்துகொண்டு இந்த சனியன் ஆடிய ஆட்டம், தன குடும்பத்திற்காக டெல்லி போய் தவங்கிடந்து வாங்கிய பதவிகள்
அழகிரியின் வெறியாட்டம் - பத்திரிக்கை அலுவலகம் எரிப்பு
2G -Scam

இன்னும் எத்த்கனை சொல்ல ???

மக்கள் எதையும் மறக்கவில்லை, ஒரு வேளை நீங்கள் வெளிநாடு சென்றிருந்திருக்கலாம் இவைகள் நடந்த காலங்களில் ...
”தளிர் சுரேஷ்” இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல அலசல்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...