முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு இந்தியா விட்டுக்கொடுத்ததா?


இன்றைய உலகக்கோப்பை ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் எதிர்மறை ஆட்டத்தை பார்க்கையில் இது விட்டுக்கொடுக்கப்பட்ட ஆட்டமோ எனத் தோன்றுகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் துவக்க பேட்ஸ்மேன் ஜேசன் ராய் இருபது சொச்சம் ஸ்கோரில் இருக்கும் போது கீப்பருக்கு எட்ஜ் கொடுக்க அதை ரிவ்யூ பண்ண வாய்ப்பிருந்தும் கோலி எடுக்கவில்லை
அந்த அப்பீலுக்குப் பின் தான் அவுட் என்றாலும் நடுவரும் எதிரணித் தலைவரும் தன்னை வெளியேற்ற விரும்பவில்லை என்பதை உணர்ந்து கொண்ட பின்னர் தான் தான், ஜேசன் ராய் சிக்ஸர்களாக விளாசவும் ஆட்டத்தை இந்தியாவிடம் இருந்து முழுக்க பறித்துச் செல்லவும் துவங்கினார். இவ்வளவு முக்கியமான ஒரு முடிவை கோலி ஏன் ஆர்வமே இன்றி எதிரணிக்கு சாதகமாக தாரை வார்த்தார்? எட்ஜ் ஆன ஒலியை தோனி தெளிவாக கேட்டு அப்பீல் பண்ணின பின்னரும் கோலி ஏன் அது அவுட்டே இல்லை என கோலி அனைவரையும் நம்ப வைக்க முயன்றார்? இத்தனைக்கும் கோலி பவுலர் மற்றும் கீப்பரை விட தொலைவில் இருந்தார்? எட்ஜ் ஆனதையோ அந்த சன்னமான ஒலியையோ அவர் பார்த்திருக்க, கேட்டிருக்க சாத்தியமில்லை. இருந்தும் ஏன் அவர் அவ்வளவு ஆணித்தரமாய் வாதிட்டார்?
 இதன் பிறகு ஐம்பது ஓவர்களும் அவர் ஒரு ரிவ்யூ கூட எடுக்கவில்லை. வழக்கமாய் கோலி இதற்கு நேர்மாறானவர் என்பது நாம் அறிந்தது. இன்னொரு பக்கம் இங்கிலாந்தும் இந்த கொடைக்கு நன்றி சொல்வது போல இந்திய பேட்ஸ்மேன் ஹர்த்திக் பாண்டியாவின் ஒரு டைட்டான LBWவை ரெவ்யூ பண்ணவில்லை. ஒட்டுமொத்தமாய், 100 ஓவர்களும் இரண்டு அணிகளும் ஒருமுறை கூட ரெவ்யூ பண்ணவில்லை. பொதுவாக ரெவ்யூ என்பது ஒரு அணியின் வெற்றி ஆவேசத்தை பிரதிபலிப்பது. ரெய்வூயை இரு அணிகளும் தொடவே இல்லை என்பது இது ஒரு fixed ஆட்டம் என்பதை காட்டுகிறதா?


இங்கிலாந்து மட்டையாளர்கள் குல்தீப் மற்றும் சாஹலை சுலபமாக சிக்ஸர்கள் விளாசும் போதும் பும்ரா அல்லது ஷாமியை கொண்டு வந்து விக்கெட் எடுக்க கோலி சற்றும் முயலவில்லை. மாறாக அவர் சுழலர்களையே தொடர்ந்து வீச வைத்தார். ஸ்டோக்ஸ் மட்டையாட வந்த போது கூட அவர் ஜாதவை வீச வைத்து விக்கெட் எடுக்கவோ அல்லது தன் சாஹலை 40 ஓவருக்கு பிறகு வீச வைக்காமல் இருக்கவோ முயன்றிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறை வேகவீச்சாளர்கள் ரன்களை குறைக்கும் போது கோலி கால்சுழலர்களை ஸ்டோக்ஸுக்கு விருந்தாக படைத்துக் கொண்டிருந்தார்

பேட்டிங்கிலும் இந்தியா ஓரளவுக்கு போராடியது. ஆனால் நாற்பதாவது ஓவர் கடந்த நிலையில் ஹர்த்திக் வெளியேறிய பின் தோனியும் ஜாதவும் ஆடிய விதம் மிகவும் அவமானகரமாய் இருந்தது. டெஸ்ட் போட்டியின் கடைசி செஷன் என்பது போல பந்துகளை கோட்டை விட்டனர். ஆடுதளம் மெத்தனமாகத் தான் இருந்தது, இங்கிலாந்து பவுலர்கள் எல்லா பந்துகளையும் மெதுவாகத் தான் போட்டார்கள். நான் மறுக்கவில்லை. ஆனால் தோனியும் அவரது சகாவும் கடைசி ஓவர் வரை ஒற்றை ரன்களாக எடுத்து, வெற்றிக்கு தேவையான ரன்களின் சராசரியை 13இல் இருந்து 30க்கு மேலாக வேண்டுமென்றே கூலாக எகிற விட்டதை, ஒரு சின்ன ரிஸ்க் கூட எடுக்க முயலாததை நாம் எப்படி புரிந்து கொள்ள?

வெற்றி பெற சாத்தியமே இல்லாத நிலை என்றால், இந்தியா குறைந்த பட்சம் 300 ரன்களையாவது எட்டி நெட் ரன்ரேட்டை ஏற்றிட முயலலாம். ஆனால் அடுத்து இலங்கை மற்றும் வங்க தேசத்துடனான ஆட்டங்களில் வென்று நாம் சுலபமாக அரை இறுதியை எட்டிட முடியும் எனும் நிலையில் நெட் ரன்ரேட் பற்றி நாம் அக்கறைப்பட அவசியமே இல்லை. தோனியோ ஜாதவோ வேகமாய் அடிக்க முயன்று வெளியேறி இருந்தாலும் அது இந்தியாவின் உலகக்கோப்பை முன்னேற்றத்தை சற்றும் பாதித்திருக்காது. ஆனாலும் இந்தியா இந்த முற்றிலும் எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்தது என்பது எப்படி புரிந்து கொள்ள? சற்று மெத்தனமான ஆடுதளத்தில் ஓவருக்கு 20 ரன்கள் அடிப்பது அசாத்தியம். ஆனால் ஓவருக்கு 12 என்பது நிச்சயம் சாத்தியமே. குறைந்தது முயற்சி பண்ணும் அளவுக்கு வாய்ப்புள்ள ஒரு இலக்கே. இந்தியா முயற்சி பண்ணக் கூட இல்லை, இறுதி வரை ஒற்றை ரன்களே ஓடியது என்பது இந்த வெற்றி இந்தியாவுக்கு அவசியம் இல்லை, எதிரணி ஜெயித்து விட்டுப் போகட்டும் என இங்கிலாந்து அணியுடன் இந்தியா முன்கூட்டியே ஒரு உடன்படிக்கை கொண்டிருந்ததோ எனும் சந்தேகத்தை கிளப்புகிறது.


கோலிக்கும் அசருதீனுக்கும் என்ன வித்தியாசம்?

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இங்கிலாந்த் ஜெயித்தால் பாகிஸ்தானின் அரையிருதி வாய்ப்பு பரிபோகும். 90களின் பயம்தான் காரணம்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இங்கிலாந்த் ஜெயித்தால் பாகிஸ்தானின் அரையிருதி வாய்ப்பு பரிபோகும். 90களின் பயம்தான் காரணம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...