முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு இந்தியா விட்டுக்கொடுத்ததா?


இன்றைய உலகக்கோப்பை ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் எதிர்மறை ஆட்டத்தை பார்க்கையில் இது விட்டுக்கொடுக்கப்பட்ட ஆட்டமோ எனத் தோன்றுகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் துவக்க பேட்ஸ்மேன் ஜேசன் ராய் இருபது சொச்சம் ஸ்கோரில் இருக்கும் போது கீப்பருக்கு எட்ஜ் கொடுக்க அதை ரிவ்யூ பண்ண வாய்ப்பிருந்தும் கோலி எடுக்கவில்லை
அந்த அப்பீலுக்குப் பின் தான் அவுட் என்றாலும் நடுவரும் எதிரணித் தலைவரும் தன்னை வெளியேற்ற விரும்பவில்லை என்பதை உணர்ந்து கொண்ட பின்னர் தான் தான், ஜேசன் ராய் சிக்ஸர்களாக விளாசவும் ஆட்டத்தை இந்தியாவிடம் இருந்து முழுக்க பறித்துச் செல்லவும் துவங்கினார். இவ்வளவு முக்கியமான ஒரு முடிவை கோலி ஏன் ஆர்வமே இன்றி எதிரணிக்கு சாதகமாக தாரை வார்த்தார்? எட்ஜ் ஆன ஒலியை தோனி தெளிவாக கேட்டு அப்பீல் பண்ணின பின்னரும் கோலி ஏன் அது அவுட்டே இல்லை என கோலி அனைவரையும் நம்ப வைக்க முயன்றார்? இத்தனைக்கும் கோலி பவுலர் மற்றும் கீப்பரை விட தொலைவில் இருந்தார்? எட்ஜ் ஆனதையோ அந்த சன்னமான ஒலியையோ அவர் பார்த்திருக்க, கேட்டிருக்க சாத்தியமில்லை. இருந்தும் ஏன் அவர் அவ்வளவு ஆணித்தரமாய் வாதிட்டார்?
 இதன் பிறகு ஐம்பது ஓவர்களும் அவர் ஒரு ரிவ்யூ கூட எடுக்கவில்லை. வழக்கமாய் கோலி இதற்கு நேர்மாறானவர் என்பது நாம் அறிந்தது. இன்னொரு பக்கம் இங்கிலாந்தும் இந்த கொடைக்கு நன்றி சொல்வது போல இந்திய பேட்ஸ்மேன் ஹர்த்திக் பாண்டியாவின் ஒரு டைட்டான LBWவை ரெவ்யூ பண்ணவில்லை. ஒட்டுமொத்தமாய், 100 ஓவர்களும் இரண்டு அணிகளும் ஒருமுறை கூட ரெவ்யூ பண்ணவில்லை. பொதுவாக ரெவ்யூ என்பது ஒரு அணியின் வெற்றி ஆவேசத்தை பிரதிபலிப்பது. ரெய்வூயை இரு அணிகளும் தொடவே இல்லை என்பது இது ஒரு fixed ஆட்டம் என்பதை காட்டுகிறதா?


இங்கிலாந்து மட்டையாளர்கள் குல்தீப் மற்றும் சாஹலை சுலபமாக சிக்ஸர்கள் விளாசும் போதும் பும்ரா அல்லது ஷாமியை கொண்டு வந்து விக்கெட் எடுக்க கோலி சற்றும் முயலவில்லை. மாறாக அவர் சுழலர்களையே தொடர்ந்து வீச வைத்தார். ஸ்டோக்ஸ் மட்டையாட வந்த போது கூட அவர் ஜாதவை வீச வைத்து விக்கெட் எடுக்கவோ அல்லது தன் சாஹலை 40 ஓவருக்கு பிறகு வீச வைக்காமல் இருக்கவோ முயன்றிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறை வேகவீச்சாளர்கள் ரன்களை குறைக்கும் போது கோலி கால்சுழலர்களை ஸ்டோக்ஸுக்கு விருந்தாக படைத்துக் கொண்டிருந்தார்

பேட்டிங்கிலும் இந்தியா ஓரளவுக்கு போராடியது. ஆனால் நாற்பதாவது ஓவர் கடந்த நிலையில் ஹர்த்திக் வெளியேறிய பின் தோனியும் ஜாதவும் ஆடிய விதம் மிகவும் அவமானகரமாய் இருந்தது. டெஸ்ட் போட்டியின் கடைசி செஷன் என்பது போல பந்துகளை கோட்டை விட்டனர். ஆடுதளம் மெத்தனமாகத் தான் இருந்தது, இங்கிலாந்து பவுலர்கள் எல்லா பந்துகளையும் மெதுவாகத் தான் போட்டார்கள். நான் மறுக்கவில்லை. ஆனால் தோனியும் அவரது சகாவும் கடைசி ஓவர் வரை ஒற்றை ரன்களாக எடுத்து, வெற்றிக்கு தேவையான ரன்களின் சராசரியை 13இல் இருந்து 30க்கு மேலாக வேண்டுமென்றே கூலாக எகிற விட்டதை, ஒரு சின்ன ரிஸ்க் கூட எடுக்க முயலாததை நாம் எப்படி புரிந்து கொள்ள?

வெற்றி பெற சாத்தியமே இல்லாத நிலை என்றால், இந்தியா குறைந்த பட்சம் 300 ரன்களையாவது எட்டி நெட் ரன்ரேட்டை ஏற்றிட முயலலாம். ஆனால் அடுத்து இலங்கை மற்றும் வங்க தேசத்துடனான ஆட்டங்களில் வென்று நாம் சுலபமாக அரை இறுதியை எட்டிட முடியும் எனும் நிலையில் நெட் ரன்ரேட் பற்றி நாம் அக்கறைப்பட அவசியமே இல்லை. தோனியோ ஜாதவோ வேகமாய் அடிக்க முயன்று வெளியேறி இருந்தாலும் அது இந்தியாவின் உலகக்கோப்பை முன்னேற்றத்தை சற்றும் பாதித்திருக்காது. ஆனாலும் இந்தியா இந்த முற்றிலும் எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்தது என்பது எப்படி புரிந்து கொள்ள? சற்று மெத்தனமான ஆடுதளத்தில் ஓவருக்கு 20 ரன்கள் அடிப்பது அசாத்தியம். ஆனால் ஓவருக்கு 12 என்பது நிச்சயம் சாத்தியமே. குறைந்தது முயற்சி பண்ணும் அளவுக்கு வாய்ப்புள்ள ஒரு இலக்கே. இந்தியா முயற்சி பண்ணக் கூட இல்லை, இறுதி வரை ஒற்றை ரன்களே ஓடியது என்பது இந்த வெற்றி இந்தியாவுக்கு அவசியம் இல்லை, எதிரணி ஜெயித்து விட்டுப் போகட்டும் என இங்கிலாந்து அணியுடன் இந்தியா முன்கூட்டியே ஒரு உடன்படிக்கை கொண்டிருந்ததோ எனும் சந்தேகத்தை கிளப்புகிறது.


கோலிக்கும் அசருதீனுக்கும் என்ன வித்தியாசம்?

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இங்கிலாந்த் ஜெயித்தால் பாகிஸ்தானின் அரையிருதி வாய்ப்பு பரிபோகும். 90களின் பயம்தான் காரணம்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இங்கிலாந்த் ஜெயித்தால் பாகிஸ்தானின் அரையிருதி வாய்ப்பு பரிபோகும். 90களின் பயம்தான் காரணம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...