Skip to main content

உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு இந்தியா விட்டுக்கொடுத்ததா?


இன்றைய உலகக்கோப்பை ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் எதிர்மறை ஆட்டத்தை பார்க்கையில் இது விட்டுக்கொடுக்கப்பட்ட ஆட்டமோ எனத் தோன்றுகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் துவக்க பேட்ஸ்மேன் ஜேசன் ராய் இருபது சொச்சம் ஸ்கோரில் இருக்கும் போது கீப்பருக்கு எட்ஜ் கொடுக்க அதை ரிவ்யூ பண்ண வாய்ப்பிருந்தும் கோலி எடுக்கவில்லை
அந்த அப்பீலுக்குப் பின் தான் அவுட் என்றாலும் நடுவரும் எதிரணித் தலைவரும் தன்னை வெளியேற்ற விரும்பவில்லை என்பதை உணர்ந்து கொண்ட பின்னர் தான் தான், ஜேசன் ராய் சிக்ஸர்களாக விளாசவும் ஆட்டத்தை இந்தியாவிடம் இருந்து முழுக்க பறித்துச் செல்லவும் துவங்கினார். இவ்வளவு முக்கியமான ஒரு முடிவை கோலி ஏன் ஆர்வமே இன்றி எதிரணிக்கு சாதகமாக தாரை வார்த்தார்? எட்ஜ் ஆன ஒலியை தோனி தெளிவாக கேட்டு அப்பீல் பண்ணின பின்னரும் கோலி ஏன் அது அவுட்டே இல்லை என கோலி அனைவரையும் நம்ப வைக்க முயன்றார்? இத்தனைக்கும் கோலி பவுலர் மற்றும் கீப்பரை விட தொலைவில் இருந்தார்? எட்ஜ் ஆனதையோ அந்த சன்னமான ஒலியையோ அவர் பார்த்திருக்க, கேட்டிருக்க சாத்தியமில்லை. இருந்தும் ஏன் அவர் அவ்வளவு ஆணித்தரமாய் வாதிட்டார்?
 இதன் பிறகு ஐம்பது ஓவர்களும் அவர் ஒரு ரிவ்யூ கூட எடுக்கவில்லை. வழக்கமாய் கோலி இதற்கு நேர்மாறானவர் என்பது நாம் அறிந்தது. இன்னொரு பக்கம் இங்கிலாந்தும் இந்த கொடைக்கு நன்றி சொல்வது போல இந்திய பேட்ஸ்மேன் ஹர்த்திக் பாண்டியாவின் ஒரு டைட்டான LBWவை ரெவ்யூ பண்ணவில்லை. ஒட்டுமொத்தமாய், 100 ஓவர்களும் இரண்டு அணிகளும் ஒருமுறை கூட ரெவ்யூ பண்ணவில்லை. பொதுவாக ரெவ்யூ என்பது ஒரு அணியின் வெற்றி ஆவேசத்தை பிரதிபலிப்பது. ரெய்வூயை இரு அணிகளும் தொடவே இல்லை என்பது இது ஒரு fixed ஆட்டம் என்பதை காட்டுகிறதா?


இங்கிலாந்து மட்டையாளர்கள் குல்தீப் மற்றும் சாஹலை சுலபமாக சிக்ஸர்கள் விளாசும் போதும் பும்ரா அல்லது ஷாமியை கொண்டு வந்து விக்கெட் எடுக்க கோலி சற்றும் முயலவில்லை. மாறாக அவர் சுழலர்களையே தொடர்ந்து வீச வைத்தார். ஸ்டோக்ஸ் மட்டையாட வந்த போது கூட அவர் ஜாதவை வீச வைத்து விக்கெட் எடுக்கவோ அல்லது தன் சாஹலை 40 ஓவருக்கு பிறகு வீச வைக்காமல் இருக்கவோ முயன்றிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறை வேகவீச்சாளர்கள் ரன்களை குறைக்கும் போது கோலி கால்சுழலர்களை ஸ்டோக்ஸுக்கு விருந்தாக படைத்துக் கொண்டிருந்தார்

பேட்டிங்கிலும் இந்தியா ஓரளவுக்கு போராடியது. ஆனால் நாற்பதாவது ஓவர் கடந்த நிலையில் ஹர்த்திக் வெளியேறிய பின் தோனியும் ஜாதவும் ஆடிய விதம் மிகவும் அவமானகரமாய் இருந்தது. டெஸ்ட் போட்டியின் கடைசி செஷன் என்பது போல பந்துகளை கோட்டை விட்டனர். ஆடுதளம் மெத்தனமாகத் தான் இருந்தது, இங்கிலாந்து பவுலர்கள் எல்லா பந்துகளையும் மெதுவாகத் தான் போட்டார்கள். நான் மறுக்கவில்லை. ஆனால் தோனியும் அவரது சகாவும் கடைசி ஓவர் வரை ஒற்றை ரன்களாக எடுத்து, வெற்றிக்கு தேவையான ரன்களின் சராசரியை 13இல் இருந்து 30க்கு மேலாக வேண்டுமென்றே கூலாக எகிற விட்டதை, ஒரு சின்ன ரிஸ்க் கூட எடுக்க முயலாததை நாம் எப்படி புரிந்து கொள்ள?

வெற்றி பெற சாத்தியமே இல்லாத நிலை என்றால், இந்தியா குறைந்த பட்சம் 300 ரன்களையாவது எட்டி நெட் ரன்ரேட்டை ஏற்றிட முயலலாம். ஆனால் அடுத்து இலங்கை மற்றும் வங்க தேசத்துடனான ஆட்டங்களில் வென்று நாம் சுலபமாக அரை இறுதியை எட்டிட முடியும் எனும் நிலையில் நெட் ரன்ரேட் பற்றி நாம் அக்கறைப்பட அவசியமே இல்லை. தோனியோ ஜாதவோ வேகமாய் அடிக்க முயன்று வெளியேறி இருந்தாலும் அது இந்தியாவின் உலகக்கோப்பை முன்னேற்றத்தை சற்றும் பாதித்திருக்காது. ஆனாலும் இந்தியா இந்த முற்றிலும் எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்தது என்பது எப்படி புரிந்து கொள்ள? சற்று மெத்தனமான ஆடுதளத்தில் ஓவருக்கு 20 ரன்கள் அடிப்பது அசாத்தியம். ஆனால் ஓவருக்கு 12 என்பது நிச்சயம் சாத்தியமே. குறைந்தது முயற்சி பண்ணும் அளவுக்கு வாய்ப்புள்ள ஒரு இலக்கே. இந்தியா முயற்சி பண்ணக் கூட இல்லை, இறுதி வரை ஒற்றை ரன்களே ஓடியது என்பது இந்த வெற்றி இந்தியாவுக்கு அவசியம் இல்லை, எதிரணி ஜெயித்து விட்டுப் போகட்டும் என இங்கிலாந்து அணியுடன் இந்தியா முன்கூட்டியே ஒரு உடன்படிக்கை கொண்டிருந்ததோ எனும் சந்தேகத்தை கிளப்புகிறது.


கோலிக்கும் அசருதீனுக்கும் என்ன வித்தியாசம்?

Comments

Anonymous said…
இங்கிலாந்த் ஜெயித்தால் பாகிஸ்தானின் அரையிருதி வாய்ப்பு பரிபோகும். 90களின் பயம்தான் காரணம்
Anonymous said…
இங்கிலாந்த் ஜெயித்தால் பாகிஸ்தானின் அரையிருதி வாய்ப்பு பரிபோகும். 90களின் பயம்தான் காரணம்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...