முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு யுடியூப் சேனல் ஆரம்பிக்கலாமா?

நண்பர்களே, ஒரு யுடியூப் சேனல் ஆரம்பிக்கலாம் என இருக்கிறேன் - சினிமா, அரசியல், சாப்பாடு என்றெல்லாம் கும்பலோடு கோவிந்தாவாக அது இருக்காது. இலக்கியம், தத்துவம், நான் வாசித்த சிறந்த நூல்களின் அறிமுகம், (அவ்வப்போது மட்டும்) சமூக அரசியல் விசயங்களில் என்னுடைய பார்வை, கூடவே அன்றாடம் என் மனத்தில் உதிக்கிற எண்ணங்களை விவாதிப்பது என காணொலிகளைப் பதிவேற்ற உத்தேசம்.

 பல்லாயிரம், பல லட்சம் பார்வையாளர்களைப் பெறுவதோ, மூட்டை மூட்டையாய் சம்பாதிப்பதோ உத்தேசம் அல்ல; என்னால் இந்த பிரேக்கிங் நியூஸ், கேளிக்கையாள யுடியூபர்களால் போட்டியிட முடியாது. சுதந்திரமாக சொந்த விருப்பப்படி இயங்கினால் ஒருவருக்குக் கிடைக்கிற வியூஸ் எனக்கும் போதும் என நினைக்கிறேன். 


எதற்கு ஒரு யுடியூப் சேனல்?


மக்கள் படிப்பதில் ஆர்வம் இழந்து கொண்டே வருகிறார்கள். ஒன்றை காட்சிபூர்வமாய், பேச்சாய் கொண்டு சேர்க்கும் போது அழுத்தமாய் அவர்கள் மனத்தில் பதிகிறது.

மேலும் ஒரு கருத்தை வாசகர்களை விட பார்வையாளர்களிடம் பரவலாக வேகமாய் கொண்டு சேர்க்க முடிகிறது. காணொலி வழியாக வெளியாகும் போது, எழுத்தை விட, குறைந்தது பத்து மடங்கு அதிகமாய் நம் கருத்துக்கள் போய் சேர்கின்றன. திறமையான பேச்சாளர்களால் நூறு மடங்கு அதிகமாய் கூட போய் சேர முடியும்.


 பிளாகில் இருந்து பேஸ்புக்குக்கு வந்ததைப் போல யுடியூபுக்குப் போகிறோம். எப்படி பேஸ்புக்கில் பிரபலமாக முயல்வில்லையோ யுடியூபிலும் மாட்டேன். அதனால் லைக் பண்ணுங்க, ‘சர்ப்ரைஸ்’ பண்ணுங்க என்றெல்லாம் ஒவ்வொரு முறையும் உங்களை டார்ச்சர் பண்ண மாட்டேன். வழக்கமாய் பார்க்கிறவர்கள், பார்க்க வேண்டியவர்கள் மட்டும் பார்த்தால் போதும். வனிதா சேனல், சினிமா விகடன் பேட்டிகள், சமையல் வீடியோக்களை, செலிபிரிடி விளாகுகளைப் பார்க்கிறவர்களிடம் ஒரு தீவிரமான கருத்தை சுலபத்தில் கொண்டு சேர்க்க முடியாது என அறிவேன். என்னைப் போல யோசிக்கிற ஒரு சிறுபான்மையைத் தான் இலக்காக வைத்துள்ளேன். 


உங்கள் அறிவுரைகளை, கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

கருத்துகள்

Avargal Unmaigal இவ்வாறு கூறியுள்ளார்…

உங்களைப் போன்றவர்களிடம் உள்ள எழுத்தின் வீச்சு யூடியுப்பின் பேச்சில் வராது.. அப்படியே ஆரம்பித்தாலும் ஒரு வீடியோவில் ஒரு செய்தியை மட்டும் பகிருங்கள் அதுவும் 10 நிமிடங்களுக்கு மேல் செல்ல வேண்டாம்
Costal Demon இவ்வாறு கூறியுள்ளார்…
கண்டிப்பாக ஆரம்பியுங்கள். உயிர்மையில் கிரிக்கெட் பற்றி நீங்கள் பேசுவதைக் கேட்ட பின் தோன்றியது, உங்களுக்கு நன்றாகப் பேசவும் வருகிறது. வாழ்த்துக்கள்!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நிச்சயம் ஆரம்பியுங்கள்.
Senthil Prabu இவ்வாறு கூறியுள்ளார்…
I'm with you Nanbarae:)
Manimaran J இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுடைய எழுத்தும் பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களுடைய பயணத்திற்கு வாழ்த்துகள்.
நட்சத்திரவாசி இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் அபிலாஷ்.
உங்கள் எண்ணங்களுக்கு காட்சி வடிவம் கொடுக்க முடியுமானால் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் உயிர்மையில் எழுதிய ‘புரூஸ்லீ’ பற்றிய கட்டுரைக்கு அப்படி ஒரு வடிவம் கொடுக்க உங்கள் அனுமதியுடன் நினைத்திருந்தேன். ‘முகமூடி’ படம் பற்றிய கருத்துக்களுடன் மாறுபட்டாலும். சீக்கிரமே உங்களை யூ-ட்யூப் காணொளிகள் மூலம் சந்தித்து இணைப்பில் இருக்க ஆவல்.
மீண்டும் வாழ்த்துக்களுடன்
ஆத்மாநாம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...