Skip to main content

ஒரு யுடியூப் சேனல் ஆரம்பிக்கலாமா?

நண்பர்களே, ஒரு யுடியூப் சேனல் ஆரம்பிக்கலாம் என இருக்கிறேன் - சினிமா, அரசியல், சாப்பாடு என்றெல்லாம் கும்பலோடு கோவிந்தாவாக அது இருக்காது. இலக்கியம், தத்துவம், நான் வாசித்த சிறந்த நூல்களின் அறிமுகம், (அவ்வப்போது மட்டும்) சமூக அரசியல் விசயங்களில் என்னுடைய பார்வை, கூடவே அன்றாடம் என் மனத்தில் உதிக்கிற எண்ணங்களை விவாதிப்பது என காணொலிகளைப் பதிவேற்ற உத்தேசம்.

 பல்லாயிரம், பல லட்சம் பார்வையாளர்களைப் பெறுவதோ, மூட்டை மூட்டையாய் சம்பாதிப்பதோ உத்தேசம் அல்ல; என்னால் இந்த பிரேக்கிங் நியூஸ், கேளிக்கையாள யுடியூபர்களால் போட்டியிட முடியாது. சுதந்திரமாக சொந்த விருப்பப்படி இயங்கினால் ஒருவருக்குக் கிடைக்கிற வியூஸ் எனக்கும் போதும் என நினைக்கிறேன். 


எதற்கு ஒரு யுடியூப் சேனல்?


மக்கள் படிப்பதில் ஆர்வம் இழந்து கொண்டே வருகிறார்கள். ஒன்றை காட்சிபூர்வமாய், பேச்சாய் கொண்டு சேர்க்கும் போது அழுத்தமாய் அவர்கள் மனத்தில் பதிகிறது.

மேலும் ஒரு கருத்தை வாசகர்களை விட பார்வையாளர்களிடம் பரவலாக வேகமாய் கொண்டு சேர்க்க முடிகிறது. காணொலி வழியாக வெளியாகும் போது, எழுத்தை விட, குறைந்தது பத்து மடங்கு அதிகமாய் நம் கருத்துக்கள் போய் சேர்கின்றன. திறமையான பேச்சாளர்களால் நூறு மடங்கு அதிகமாய் கூட போய் சேர முடியும்.


 பிளாகில் இருந்து பேஸ்புக்குக்கு வந்ததைப் போல யுடியூபுக்குப் போகிறோம். எப்படி பேஸ்புக்கில் பிரபலமாக முயல்வில்லையோ யுடியூபிலும் மாட்டேன். அதனால் லைக் பண்ணுங்க, ‘சர்ப்ரைஸ்’ பண்ணுங்க என்றெல்லாம் ஒவ்வொரு முறையும் உங்களை டார்ச்சர் பண்ண மாட்டேன். வழக்கமாய் பார்க்கிறவர்கள், பார்க்க வேண்டியவர்கள் மட்டும் பார்த்தால் போதும். வனிதா சேனல், சினிமா விகடன் பேட்டிகள், சமையல் வீடியோக்களை, செலிபிரிடி விளாகுகளைப் பார்க்கிறவர்களிடம் ஒரு தீவிரமான கருத்தை சுலபத்தில் கொண்டு சேர்க்க முடியாது என அறிவேன். என்னைப் போல யோசிக்கிற ஒரு சிறுபான்மையைத் தான் இலக்காக வைத்துள்ளேன். 


உங்கள் அறிவுரைகளை, கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

Comments


உங்களைப் போன்றவர்களிடம் உள்ள எழுத்தின் வீச்சு யூடியுப்பின் பேச்சில் வராது.. அப்படியே ஆரம்பித்தாலும் ஒரு வீடியோவில் ஒரு செய்தியை மட்டும் பகிருங்கள் அதுவும் 10 நிமிடங்களுக்கு மேல் செல்ல வேண்டாம்
Costal Demon said…
கண்டிப்பாக ஆரம்பியுங்கள். உயிர்மையில் கிரிக்கெட் பற்றி நீங்கள் பேசுவதைக் கேட்ட பின் தோன்றியது, உங்களுக்கு நன்றாகப் பேசவும் வருகிறது. வாழ்த்துக்கள்!
Unknown said…
நிச்சயம் ஆரம்பியுங்கள்.
Senthil Prabu said…
I'm with you Nanbarae:)
Manimaran J said…
உங்களுடைய எழுத்தும் பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களுடைய பயணத்திற்கு வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் அபிலாஷ்.
உங்கள் எண்ணங்களுக்கு காட்சி வடிவம் கொடுக்க முடியுமானால் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் உயிர்மையில் எழுதிய ‘புரூஸ்லீ’ பற்றிய கட்டுரைக்கு அப்படி ஒரு வடிவம் கொடுக்க உங்கள் அனுமதியுடன் நினைத்திருந்தேன். ‘முகமூடி’ படம் பற்றிய கருத்துக்களுடன் மாறுபட்டாலும். சீக்கிரமே உங்களை யூ-ட்யூப் காணொளிகள் மூலம் சந்தித்து இணைப்பில் இருக்க ஆவல்.
மீண்டும் வாழ்த்துக்களுடன்
ஆத்மாநாம்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...