முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு யுடியூப் சேனல் ஆரம்பிக்கலாமா?

நண்பர்களே, ஒரு யுடியூப் சேனல் ஆரம்பிக்கலாம் என இருக்கிறேன் - சினிமா, அரசியல், சாப்பாடு என்றெல்லாம் கும்பலோடு கோவிந்தாவாக அது இருக்காது. இலக்கியம், தத்துவம், நான் வாசித்த சிறந்த நூல்களின் அறிமுகம், (அவ்வப்போது மட்டும்) சமூக அரசியல் விசயங்களில் என்னுடைய பார்வை, கூடவே அன்றாடம் என் மனத்தில் உதிக்கிற எண்ணங்களை விவாதிப்பது என காணொலிகளைப் பதிவேற்ற உத்தேசம்.

 பல்லாயிரம், பல லட்சம் பார்வையாளர்களைப் பெறுவதோ, மூட்டை மூட்டையாய் சம்பாதிப்பதோ உத்தேசம் அல்ல; என்னால் இந்த பிரேக்கிங் நியூஸ், கேளிக்கையாள யுடியூபர்களால் போட்டியிட முடியாது. சுதந்திரமாக சொந்த விருப்பப்படி இயங்கினால் ஒருவருக்குக் கிடைக்கிற வியூஸ் எனக்கும் போதும் என நினைக்கிறேன். 


எதற்கு ஒரு யுடியூப் சேனல்?


மக்கள் படிப்பதில் ஆர்வம் இழந்து கொண்டே வருகிறார்கள். ஒன்றை காட்சிபூர்வமாய், பேச்சாய் கொண்டு சேர்க்கும் போது அழுத்தமாய் அவர்கள் மனத்தில் பதிகிறது.

மேலும் ஒரு கருத்தை வாசகர்களை விட பார்வையாளர்களிடம் பரவலாக வேகமாய் கொண்டு சேர்க்க முடிகிறது. காணொலி வழியாக வெளியாகும் போது, எழுத்தை விட, குறைந்தது பத்து மடங்கு அதிகமாய் நம் கருத்துக்கள் போய் சேர்கின்றன. திறமையான பேச்சாளர்களால் நூறு மடங்கு அதிகமாய் கூட போய் சேர முடியும்.


 பிளாகில் இருந்து பேஸ்புக்குக்கு வந்ததைப் போல யுடியூபுக்குப் போகிறோம். எப்படி பேஸ்புக்கில் பிரபலமாக முயல்வில்லையோ யுடியூபிலும் மாட்டேன். அதனால் லைக் பண்ணுங்க, ‘சர்ப்ரைஸ்’ பண்ணுங்க என்றெல்லாம் ஒவ்வொரு முறையும் உங்களை டார்ச்சர் பண்ண மாட்டேன். வழக்கமாய் பார்க்கிறவர்கள், பார்க்க வேண்டியவர்கள் மட்டும் பார்த்தால் போதும். வனிதா சேனல், சினிமா விகடன் பேட்டிகள், சமையல் வீடியோக்களை, செலிபிரிடி விளாகுகளைப் பார்க்கிறவர்களிடம் ஒரு தீவிரமான கருத்தை சுலபத்தில் கொண்டு சேர்க்க முடியாது என அறிவேன். என்னைப் போல யோசிக்கிற ஒரு சிறுபான்மையைத் தான் இலக்காக வைத்துள்ளேன். 


உங்கள் அறிவுரைகளை, கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

கருத்துகள்

Avargal Unmaigal இவ்வாறு கூறியுள்ளார்…

உங்களைப் போன்றவர்களிடம் உள்ள எழுத்தின் வீச்சு யூடியுப்பின் பேச்சில் வராது.. அப்படியே ஆரம்பித்தாலும் ஒரு வீடியோவில் ஒரு செய்தியை மட்டும் பகிருங்கள் அதுவும் 10 நிமிடங்களுக்கு மேல் செல்ல வேண்டாம்
Costal Demon இவ்வாறு கூறியுள்ளார்…
கண்டிப்பாக ஆரம்பியுங்கள். உயிர்மையில் கிரிக்கெட் பற்றி நீங்கள் பேசுவதைக் கேட்ட பின் தோன்றியது, உங்களுக்கு நன்றாகப் பேசவும் வருகிறது. வாழ்த்துக்கள்!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நிச்சயம் ஆரம்பியுங்கள்.
Senthil Prabu இவ்வாறு கூறியுள்ளார்…
I'm with you Nanbarae:)
Manimaran J இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுடைய எழுத்தும் பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களுடைய பயணத்திற்கு வாழ்த்துகள்.
நட்சத்திரவாசி இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் அபிலாஷ்.
உங்கள் எண்ணங்களுக்கு காட்சி வடிவம் கொடுக்க முடியுமானால் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் உயிர்மையில் எழுதிய ‘புரூஸ்லீ’ பற்றிய கட்டுரைக்கு அப்படி ஒரு வடிவம் கொடுக்க உங்கள் அனுமதியுடன் நினைத்திருந்தேன். ‘முகமூடி’ படம் பற்றிய கருத்துக்களுடன் மாறுபட்டாலும். சீக்கிரமே உங்களை யூ-ட்யூப் காணொளிகள் மூலம் சந்தித்து இணைப்பில் இருக்க ஆவல்.
மீண்டும் வாழ்த்துக்களுடன்
ஆத்மாநாம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...