முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” - ஆர். அபிலாஷ்



சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு கொலைவழக்கின் சாயலில் எழுதப்பட்ட உளவியல் துப்பறியும் நாவல் இது. அந்த கொலைவழக்கு பல சதிக்கோட்பாடுகள் நிறைந்ததாக ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. இவை பொதுமக்களால் உருவாக்கப்பட்டவை அல்ல, மாறாக வெளியில் இருந்து இந்த வழக்குவிசாரணையை கண்காணித்து வந்த சக்திகளால் உற்பத்தி பண்ணப்பட்டவை அவை. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கோணம் இந்த வழக்குக்கு கிடைத்தது. சதிக்கோட்பாட்டுகளின் இடையே கொலைக்கான நடைமுறைக் காரணங்கள் எவை என அலசி கண்டெடுக்கிறது இந்நாவல்; நிரப்ப முடியாத இடைவெளிகளை தன் கற்பனையால் உணர்ச்சிகளால் நம்பிக்கைகளால் அது நிரப்புகிறது.

 குற்றவுணர்வு குற்றத்தில் இருந்து பிறக்காமல், மாறாக அதுவே ஒரு மனிதனை எப்படி குற்றத்தை நோக்கி செலுத்துகிறது? குற்றவுணர்வில் இருந்து விடுதலை என்பது சகமனிதனை அரவணைத்துக் கொள்ளும் போது கிடைக்குமா? இந்நாவலின் நாயகன் குற்றவாளியைத் தேடிச் செல்லும் போதும் இந்த கேள்விகளே அவனுக்கு இக்குற்றத்தின் தீர்வுக்கான சாவியாக கிடைக்கிறது. தன் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரு துருப்பாகவும் இந்த விசாரணை அமைகிறது. குற்றவாளி, பாதிக்கப்பட்டவள் இருவரையும் துப்பறிவாளன் தனக்குள் எப்படி ஆவாஹிக்கிறான் என்றும் இந்நாவல் பேசுகிறது.

இந்நாவல் கொலையான பெண்ணின் கொலைக்குப் பின்னான இருத்தலில் இருந்து தன் வாழ்வை மீளுருவாக்க, வடிவமைக்க, நிறமூட்ட அவள் கொள்ளும் தவிப்பில் இருந்தும் கதையை சொல்லுகிறது. கொலைக்காக தவறாக கைதாகி உயிரைக் கொடுத்தவனின் ஆன்மாவின் பாதங்களில் தன்னை இது சமர்ப்பிக்கிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.