முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறந்த விற்பனை - 'புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்'


 

விருது நகர் புத்தகக் கண்காட்சியில் இந்தச் சிறுவர்கள் காலையில பரபரப்பாக உயிர்மை அரங்கில் நுழைந்து எதையோ தேடினர். சற்று நேரத்தில் ஏமாற்றத்துடன் வெளியே வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி என்ன வேண்டும் என்று கேட்டேன் பச்சை டி ஷர்ட் அணிந்த பையன் ' சார் திருக்குறள் குட்டி புக் இருக்கா ?" என்று கேட்டான். " இல்லையேப்பா..சுஜாதா திருக்குறள் விளக்கவுரைதான் இருக்கு" என்றேன். அப்போது மஞ்சள் சட்டை அணிந்த பையன் " சார் எனக்கு வேற ஒரு புக் வேணும்...ஆனா அது விலை ரொம்ப ஜாஸ்தி...370 ரூபாய் போட்டிருக்கு.."என்றான் ஏமாற்றத்துடன். "அந்த புக்கை எடுத்து வா" என்றேன். உள்ளே ஓடிபோய் எடுத்து வந்தான். அது ஆர். அபிலாஷ் எழுதிய " புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்" புத்தகம். "உங்கிட்ட எவ்வளவு காசு இருக்கு? " என்று கேட்டேன். " இருபது ரூபாய்தான் சார் இருக்கு "என்றான் கூச்சத்துடன். " பரவாயில்லை ..கொடு" என அதை வாங்கிக்கொண்டு அந்தப் புத்தகத்தை அவனிடம் கொடுத்தேன். அவனால் அதை நம்ப முடியவில்லை. அவன் கண்களிலில் புரூஸ் லீ என்ற கனவு வீரன் மின்னினான். நான் ஒரு எதிர்கால வாசகனை அடைந்தேன். " தாங்க்ஸ் அங்கிள்.." என்று உவகையுடன் கூறியபடி அந்தப் பையன்கள் உற்சாகத்துடன் சென்றனர். "சார்" என்ற சொல். "அங்கிள்" என்ற சொல்லாக மாறிய அபூர்வ கணம் இது.

இந்தக் கண்காட்சியில் உயிர்மையின் சிறந்த விற்பனை இதுதான்.

- மனுஷ்யபுத்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.