முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு சிறுதவறும் சனியும்


2017ஆம் ஆண்டு நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் கடும் நெருக்கடி. எனக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. பல இடங்களில் வேலைக்கு முயன்று கொண்டே இருந்தேன். பெங்களூரிலும் தான் வேண்டாவெறுப்பாக முயன்றேன். இங்கே கிடைத்தது. சென்னையில் இங்குள்ள ஊதியத்தில் பாதி கிடைத்தால் கூட போதும், எந்த வேலையென்றாலும் போதும் என்றே நினைத்தேன். இன்னும் ஆறு மாதங்கள் பொறுத்திருந்தால் கிடைத்திருக்கலாம். ஆனால் பொறுமையில்லை. அதுதான் நான் அன்று செய்த தவறு. அத்தவறு என் வாழ்க்கையை இன்று தலைகீழாக்கி விட்டதே என நான் நோகாத நாளில்லை. 

நான் பெங்களூருக்கு வருவதா வேண்டாமா என முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது, ஜெயமோகனை அழைத்து அவரது அறிவுரையைக் கேட்டேன். உன் மொழி காதில் கேட்காத ஊரில் போய் இருக்காதே, ஒரு எழுத்தாளனுக்கு அது நல்லதல்ல என்றார். நான் அவருடைய அறிவுரையைக் கேட்டிருக்க வேண்டும். கேட்கவில்லை. 

ஒரே ஒரு சிறிய முடிவு. என் மொத்த வாழ்க்கையும் சர்வ நாசமாகி விட்டது. நிம்மதி, மகிழ்ச்சி போய் விட்டது.

இதே போல ஒரு 'சிறிய' முடிவை எடுத்து இந்த ஊரில் இருந்தே கிளம்பி சென்னைக்கு வரும்படியாக நிகழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

எனக்கு கிரகபலனில் நம்பிக்கை பெரிதாக இல்லை என்றாலும் நளனின் கால் பாதத்தில் சனி புகுந்ததைப் போல என் உச்சந்தலையில் அன்று அதே சனி ஏறிவிட்டதோ எனத் தோன்றுகிறது. ஏனென்றால் நளனுக்கு நடந்த ஒவ்வொன்றும் எனக்கும் நடந்தது. இதற்கு மேல் இழக்க ஒன்றுமில்லை எனும் நிலையில் தான் நளன் மீண்டு வருவான். நான் அப்படி மீள்வேனா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.