முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் குடிக்கக் கூடாது?


மது போதை, அதனால் உற்பத்தி திறன், ஆரோக்கியம் அழிகிறது, மக்கள் ஏழைகள் ஆகிறார்கள், குடும்பம் நொடிகிறது என்பதைவிட அடிப்படையான பெரும் சிக்கல் அது நம் பெருங்குடலில் உள்ள நல்ல நுண்ணுயிர்களை அழிக்கிறது என்பதே . வாரத்தில் ஒன்றிரண்டு முறை குடித்தாலே அது நம் பெருங்குடலில் உள்ள நுண்ணுயிர் அமைப்பை நாசமாக்கி பல நோய்களை ஏற்படுத்தும். ஆரோக்கியம், மகிழ்ச்சி, வலிமை எல்லாம் காலியாகிவிடும்.
என் முன் மதுப்போத்தலை யாராவது வைத்தால் நான் போதையை, ஈரலை, அதிக கலோரிகளைப் பற்றி கூட கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் "மிதமா குடிச்சா, சாலட் சாப்டா போதும்" என நம் மனம் அதை நியாயப்படுத்தும். நான் என் நுண்கிருமிகள் செத்துவிடுமோ என்றே அதிகம் வருந்துவேன். என்னைப் பொறுத்தவரையில் எனக்குள்ள மிகச்சிறந்த நண்பர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள், உறவுகள், பாதுகாப்பு சேனை, வழிகாட்டிகள் இந்த நுண்ணியிர்களே. அவற்றை பலிகொடுக்கவா என நினைத்தால் "ஐயய்யோ எவ்வளவு கவனமா சாப்டு அதுங்களைக் காப்பாத்தி வெச்சிருக்கேன், இன்னிக்கு அழிச்சிட்டா திரும்ப வளர்க்க ரெண்டு, மூன்று வாரங்கள் ஆகாதா, அப்படியே மீண்டாலும் இப்போதுள்ளவை பாவம் அல்லவா?" என்றே பதறுவேன்ன். ஒரு மிடறு போதைக்காக என் உடலுக்குள் நான் வளர்க்கும் தொட்டில் குழந்தைகளை, என் உடலின் ரெண்டாம் மூளையை, என் செல்களின் மென்பொருளை குருதிக்கொடை அளிக்க மனமில்லாமல் தவிர்த்துவிடுகிறேன்.
ஏனென்றால் இந்த நல்ல நுண்ணுயிர்கள் அழிந்துபோனால் சமநிலை குலைந்து dysbiosis எனும் பிரச்சினை வருகிறது. இதனால் மோசமான நுண்ணியிர்கள் பெருகுகின்றன. ஜெயாவின் மரணத்திற்குப் பின் பாஜக, மூன்றாவது அணி என நம் அரசியல் களம் சமநிலை குலைந்ததைப் போல. குடிபோதை ஒரு extreme நிலை. ஆனால் dysbiosis பரவலான பிரச்சினை. நாம் அதற்கே அஞ்ச வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.