முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரும் குறை - அ. ராமசாமி

பெங்களூரில் நடக்கும் - புக்பிரஹ்மாலிட் ஃபெஸ்ட்( BOOKBRAHMALITFEST) -இல் அழைக்கப்பட்டவர்களின் தகுதி, சிறப்பு போன்றவற்றைப் பற்றிய புகார்களை விடவும், பெங்களூரிலேயே இருக்கும் அபிலாஷ் சந்திரனையும் சரவண கார்த்திகேயனையும் அழைக்காததைப் பெரும் குறை என்றே சொல்வேன். இருவரும் அவர்களின் மனக்குறையைப் பதிவுகளாக எழுதிக் கடந்திருக்கிறார்கள். 

அபிலாஷின் எழுத்துப்பரப்பு விரிவானது. புனைவிலும் விமரிசனத்திலும் தத்துவம் இலக்கியத்தையும் இணைத்துப் பேசும் கோட்பாட்டு எழுத்திலும் இன்று எழுதும் எழுத்தாளர்களில் அபிலாஷின் பங்களிப்புகள் மறுதலிக்க முடியாதவை. இம்மாத உயிர்மையில் வந்துள்ள விரிவான நேர்காணலே அதற்குச் சாட்சி

சிறுபத்திரிகை அடையாளத்தையும் வணிக எழுத்தின் தன்மையையும் இணைத்துவிட முடியும் என நம்பும் சரவணகார்த்திகேயனுக்கு ஜெயமோகனும் சுஜாதாவும் முன்மாதிரிகள்.  நடப்பியல் சிறுகதைகளில் ஆரம்பித்தவர் என்றாலும் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளில் பரிசோதனைகள் செய்து வருகிறார். எதையும் திட்டமிட்டு எழுதிவிட முடியும் என்பதற்கு தன்னை உதாரணமாக்கிவருகிறார்.   அவரது சமூக ஊடக நிலைபாடுகள்/ பெண்கள் பற்றிய கருத்துகள் பலருக்கு ஒவ்வாமையைத் தரக்கூடியனவாக இருக்கும் என்பதும் அவரே ஒத்துக்கொள்ளக்கூடிய ஒன்று. 

இதையெல்லாம் தாண்டி, தமிழ் இலக்கியப்பரப்பின் அனைத்துப் போக்குகளையும் விவாதிக்கும் - விளக்கும் திறமை கொண்ட எழுத்தாளர்கள் இருவரும்.  தமிழில் பேசுவதோடு, ஆங்கிலத்திலும் தமிழ் இலக்கியத்தை முன்வைக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்பது எனது வாசிப்பிலிருந்தும் பழக்கத்தைக் கொண்டும் சொல்லமுடியும்.

 பெங்களூரில் நடக்கும் ஓர் இலக்கியத் திருவிழாவில் வெறும் பார்வையாளராக அவர்களால் கலந்துகொள்ள இயலாத ஒன்று என்பதைப் புரிந்துகொள்கிறேன்.( இருவரது எழுத்துகள் குறித்து எழுதிய கட்டுரைகள் பின்னூட்டத்தில் உள்ளன)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.