Skip to main content

ஏன் கலை, இலக்கிய, மானுடவியல் துறைகள் ஒழித்துக் கட்டப்படுகின்றன?

 Bertrand Russell's words are as relevant today as they were when he first  spoke them. “First, they fascinate the fools. Then, they muzzle the  intelligent.” It's a chilling observation on how fascism

"அகழ்" இணையதளத்தில் வந்த பேட்டியில் தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் பெங்களூரில் உள்ளதைப் போல கலைப்பாடங்களுக்கு போதிய கவனமோ முக்கியத்துவமோ இருப்பதில்லை எனக் கூறியிருந்தார். இது ஒரு முக்கியமான பிரச்சினை - தமிழ்நாட்டு அரசுகள் பொதுவாகவே மொழி, பண்பாடு ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகக் காட்டிக் கொள்ளும். இலக்கிய விழாக்கள், விருதுகள் போன்ற விசயங்கள் நிஜமாகவே ஆர்வமும் செலுத்தும். சிலநேரங்களில் இவற்றைத் தம் அரசுக்கான பிரச்சாரமாகவும் மாற்றிக் கொள்ளுமென்றாலும் இவை முக்கியமான செயல்பாடுகளே. ஆனால் இவ்வளவு புத்துயிருப்புடன் உயர்கல்வியில் கலைப்பாடங்களும், மொழிப்பாடங்களும் இல்லை; தொழில்நுட்ப, மருத்துவக் கல்விக்கு ஈடாக கலை மற்றும் மானுடவியல் படிப்புகளுக்கு சமூகமோ நிர்வாகமோ முக்கியத்துவம் அளிப்பதில்லை. குறிப்பாக இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது சமூகவியல், தத்துவம் போன்ற படிப்புகள்தாம். அவற்றை மொத்தமாக ஒழித்துவிட்டார்கள். மொழியும் இலக்கியமும் ஒண்டிக்கொண்டு இருக்கின்றன.

பெருமாள் முருகன் சொல்வதை இரு கோணங்களில் பார்க்கிறேன்:

1) முதலில் நடைமுறைப் பிரச்சினை - பெங்களூர் மாதிரியான நகரங்களில் இசை, நாடகம், இலக்கியம் ஆகியவற்றை ஊடகவியல், உளவியலுடன் கலந்து கொடுத்தால் நிறைய பேர்கள் இணைய வருகிறார்கள் (டபுள் மேஜர், டிரிப்பிள் மேஜர்). இலக்கியத்தை படைப்பாக்க பட்டப்படிப்பாகவும் சொல்லித் தருகிறார்கள் (MFA, BA in Creative Writing போல). இதற்கும் தேவை உள்ளது. தமிழ்நாடு இப்போக்கை இன்னும் கையில் எடுக்கவில்லை எனக் கருதுகிறேன். மாணவர் சேர்க்கை இல்லாததால் பல கல்லூரிகளில் மொழித்துறையை மூடியே விடுகிறார்கள்.

2) அடுத்து அரசியல் - கலை மற்றும் மானுடவியல் துறைகளுக்கான இடம் சுதந்திர சிந்தனை, படைப்பாக்கம், விவாதம், புதிய போக்குகள், ஜனநாயக விழுமியங்கள் ஆகியனவற்றை உள்ளடக்கிய ஒரு தளத்தில் அமைந்துள்ளது. இவற்றின் வேரை நாம் ஐரோப்பிய புத்தொளிக் காலத்தில், மதசார்பற்ற சிந்தனையில் காண முடியும். இதைப் பழைய (நேருவிய) பொருளாதாரம் ஊக்குவித்தது. ஆனால் 90களுக்குப் பிறகு இங்கு வந்த திறந்தநிலை, உலகயமய தாராளவாத பொருளாதாரம் இரு பத்தாண்டுகளில் வலதுசாரி பாசிச மனநிலையை ஊக்கப்படுத்துகிறது; இன்று பொருளாதார சக்திகளின் முகமாக வாதுசாரி சிந்தனையாளர்களே இருக்கிறார்கள். உலகம் முழுக்க இப்போக்கே காணப்படுகிறது. அவர்கள் கலையையும் மானுடவியலையும் எதிர்ப்பரசியலாகக் காண்கின்றன. அதாவது சிந்தனையளவில் இத்துறைகள் இன்று பாரம்பரிய அறிவை நோக்கியோ இடதுசாரி அரசியலை நோக்கியோ இரண்டின் கலவையாகவோ நிலைகொள்கின்றன. இதை சமகால அரசியல் விரும்புவதில்லை. ஆகையால் இத்தகைய தொழில்களுக்கான இடத்தை, முதலீட்டை வெகுவாகக் குறைத்து விட்டார்கள். கல்விப் புலத்தில், ஊடகங்களில், ஆலோசனைக் குழுக்களில் 'சிந்தனையாளர்கள்', 'படைப்பாளர்களுக்கான' இடத்தை ஒழித்தே விட்டார்கள். அந்த இடத்தில் ஒன்று அரசின் பிரச்சாரகர்களோ தகவலைத் தொகுத்துச் சொல்பவர்களோ இருக்கிறார்கள். இப்படி ஒழிக்கிறவர்கள் நேரடி வலதுசாரி அரசுகள் மட்டுமல்ல - முற்போக்காகக் காட்டிக் கொள்கிறவர்களும் இப்படியே இருக்கிறார்கள்; மாற்றுச் சிந்தனையாளர்களைக் கண்டாலே கதவை மூடிவிடுகிறார்கள். இதை நான் பலரிடமும் இருந்தும் கேள்விப்பட்டிருக்கிறேன். தாம் நினைப்பதை கேள்வியின்றி ஏற்பவர்களும் வழிமொழிபவர்களுமே இன்று எந்த குழுவிலும் அணியிலும் இருக்க முடிகிறது.

இதனால், கடந்த சில பத்தாண்டுகளில் புதிய சிந்தனைகளே அருகி வருகின்றன. இது தற்செயல் அல்ல. மக்கள் சிந்திக்கக் கூடாது, மந்தையாக இருக்க வேண்டும் என்றே இன்றைய அரசுகளும் முதலீட்டாளர்களும் விரும்புகிறார்கள்.

அதேநேரம் இவர்களே சதாசர்வ நேரமும் படைப்பாக்கம், புத்தாக்கம் என்றே பேசுவார்கள் - இவ்விசயங்களை விற்கத்தக்க பண்டங்களின் கண்டுபிடிப்பில் (அறிவியல், மின்னணு தொழில்நுட்பம், ஏவுகணைகள்) மட்டும் செலுத்த விரும்புகிறார்கள். உண்மையான படைப்பூக்கமான எந்த கண்டுபிடிப்பும் புதிய சிந்தனை இன்றி, சுதந்திரமான உரையாடல் இன்றி தோன்றாது என்று யாரும் புரிந்து கொள்வதில்லை.

அதனாலே நான் கலை, இலக்கிய, மானுடவியல் துறைகளில் உலகம் முழுக்க ஒரு தேக்க நிலை தோன்றுகிறது என நினைக்கிறேன். இதற்கும் இன்றுள்ள உலகு தழுவிய பாசிச அரசியலுக்கும் ஒரு தொடர்பு உண்டு.

கூடுதலாக செய்யறிவும் வந்துவிட்டது - அதைப் பயன்படுத்துகிறவர்கள் சுயமாகச் சிந்திக்கும், அலசி ஆராயும் திறனையே இழக்கிறார்கள். இன்றுதான் அதனால் கலை, மானுடவியல், இலக்கிய படிப்புகள் நமக்கு அதிகமாகத் தேவையுள்ளன. நமக்கு மட்டும்தான், அவர்களுக்கு அல்ல.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...