முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாக்குமூலம் - புக்காவஸ்கி




மரணத்துக்கு காத்திருக்கிறேன்
படுக்கை மேல் தாவும் ஒரு பூனை போல்

என் மனைவிக்காக ரொம்ப ரொம்ப
இரக்கப்படுகிறேன்


இந்த விறைத்த
வெளுத்த
உடலை
அவள் காண்பாள்

ஒருமுறை உலுக்குவாள், பிறகு
ஒருவேளை
மீண்டும்

"ஹேங்க்"

ஹேங்க் பதிலளிக்க
மாட்டான்

என்னை வருத்துவது
என் மரணமல்ல, என் மனைவிக்கு
இந்த இன்மைக் குவியலை
விட்டுப் போகிறேன் என்பதுதான்.

ஆனாலும்,
அவள் அருகே
உறங்கிய
அத்தனை இரவுகளும்

பயனற்ற அந்த
சர்ச்சைகளும்
கூட

எப்போதுமே அற்புதமான
விஷயங்கள்
என்பதை

அவள் தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்

அத்தோடு அந்த
நான் எப்போதும்
சொல்ல பயந்த
கடின வார்த்தைகளையும்
இப்போது
சொல்லி விடலாம்:

உன்னை
காதலிக்கிறேன்.

கருத்துகள்

கருடன் இவ்வாறு கூறியுள்ளார்…
//படுக்கை மேல் தாவும் ஒரு பூனை போல்//

சத்தியமா இங்க என்ன சொல்ல வரிங்க புரியலை. கொஞ்சம் விளக்குங்க ப்லீஸ்...
R. Gopi இவ்வாறு கூறியுள்ளார்…
சூப்பர்
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
திரு.பாண்டியன்
ஒரு பூனை நான் எதிர்ப்பாராத வேகத்தில் நேரத்தில் துள்ளி ஏறக் கூடியது. பூனையை இங்கு மரணத்தின் எதிர்பாரா வருகைக்கு உவமை ஆக்குகிறார்.
அடுத்து, ”படுக்கை மேல்” என்பதை கவனியுங்கள். மரணத்தை மேல் நோக்கி முன்னேறுவது என்று புக்காவஸ்கி நம்புகிறார். தனிமனிதன் வாழ்ந்து முடிக்கும் காலம் அதிமனிதனை உருவாக்கும் அவகாசமாக இருக்க வேண்டும் என்கிற நீட்சேயிய நம்பிக்கை இது. முக்கியமான வரி இது.
கருடன் இவ்வாறு கூறியுள்ளார்…
@ஆர்.அபிலாஷ்
விளக்கத்திற்க்கு மிக்கா நன்றி!! :))

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.