முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீதமுள்ள வரிகளை சமாளிப்பது அல்லது அழிப்பது



மீதமுள்ள வரிகள்
ஒரு கண்ணாடி புட்டியின்
குடிக்கப்பட்ட
நீரின் பகுதியை போன்றவை

அவற்றை வெளியேற்ற முடியாது
அதற்கு
நீங்கள் அத்தனை வார்த்தைகளையும்
அழித்தாக வேண்டும்

ஆனால்
வேறு வழிகள் உள்ளன

என்றாவது பயன்படுத்தப் போவதாய்
உறுதி எடுத்துக் கொள்ளலாம்

மிச்சமான வரிகளைக் கொண்டு
ஒரு கவிதை எழுதலாம்
ஒரு உறவை ஆரம்பிக்கலாம்
புரியாத பரீட்சார்த்த கதையொன்றில்
எங்காவது இணைக்கலாம்
இது போன்ற வெவ்வேறு மிச்சமான் வரிகளை
இணைத்து
ஒரு கவிதை நூலுக்கான
விமர்சனக் கட்டுரை செய்யலாம்

மிச்சமான வரிகளுக்கு
புதிய அர்த்த தளங்களை
கண்டடையலாம்.

அவ்வரிகள்
தனித்தே
புகழ் தேடித் தந்து
நம் இடத்தை வரலாற்றில் நிறுவிடும்
என்று பெருமை கொள்ளலாம்

அவற்றைக் கொண்டு
ஒரு நாவலை துவக்கி
வாழ்நாளெல்லாம் எழுதலாம்

எங்குமே பொருள்பட சேர்க்க முடியாத
மிச்சமான
வரிகளைக்
கொண்டு நீங்கள் எவ்வளவோ செய்யலாம்

அழிப்பதை தவிர

அதற்கு,
நீங்கள்
பொருத்தமான
ஒரு பெயரை தந்து
தோலின் நிறம் தந்து
ஆடை அணிவித்து
நாற்காலியில் அமர்வித்து
ஒரு வரலாற்றை தந்து
வரலாற்றுக்கான விளக்கங்களும் தீர்ப்புகளும்
ஒட்டின ஊடக விவாதங்களும் தந்து

ஒவ்வொன்றாய் தர வேண்டும்.

கருத்துகள்

Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
Interesting one..
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சித்ரா
Anonymous இவ்வாறு கூறியுள்ளார்…
Well done! Reminded me of Ted Hughes' "The Thought Fox".
Umapathy இவ்வாறு கூறியுள்ளார்…
unmayavae neraya unarththuthu.
Nice
rvelkannan இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லாஇருக்கு அபி
நலமா
நளினி சங்கர் இவ்வாறு கூறியுள்ளார்…
excellent
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
I am humbled Gayathri
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி உமாபதி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.