முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விடுப்பில் இருக்கும் நாய்



ஜுரத்தில் இருக்கும் நாய்
அப்பால்
பாலத்தில் செல்லும் ரயிலின்
அலறலுக்கு
மெல்ல
எழுந்து படுக்கிறது
ஓசை அடங்கியதும்
மூச்சு சீராகிறது
பக்கத்து பால்கனியில்
விளையாடும் குழந்தைகளை நோக்கி
இருமுறை குரைத்து விட்டு வருகிறது
தன் எஜமானனுக்காக
அது காத்திருக்கவில்லை

ஆனாலும்
அவரிடம் வாலாட்டி கொஞ்சி விட்டு
திரும்புகிறது

கடிகாரம் பார்க்க தெரியாவிட்டாலும்
அதனதன் நேரத்திற்கு முன்பே
அங்கு சென்று
ஜன்னலையும் கதவையும் உணவுத்தட்டையும் நீர்க்குவளையையும் படுக்கையையும் விளையாட்டு பொருட்களையும்
கவனிக்கிறது

புதிய வாசனைகள் வராத
காற்று அடைபட்டுப் போன
மனிதர்களின் எதிரொலிகள் மட்டும் கேட்கிற
திரும்பத் திரும்ப அதே வேளைகளில்
அழைப்பு மணிகள் அடிக்கிற
அடைபட்டுப் போன
வீட்டில்
ஒரு புதிய திறப்பை
மோப்பம் பிடித்து கண்டுபிடிக்க
சின்ன சிறகடிப்புகளை தேடி பாய்ந்து செல்ல
வெளியேறாத பொழுதுகளில்
தன் கழுத்துக் கயிறை தானே தூக்கி நடக்க
அது தவறுவதில்லை

கதவு ஏன் மூடப்படவில்லை
அல்லது
கதவை யார் மூடவில்லை
என்று அது
கேட்பதில்லை
வாசலில் சென்று படுத்த பின்
ஏன் இக்கதவு
இன்னும் மூடவில்லை
என்று அசட்டையாய் யோசிக்கிறது
அவ்வெண்ணத்தை ஸ்தாபிக்க
ரெண்டு குரை குரைக்கிறது

ஜுரத்தில் இருக்கும் நாய்
தான் விடுப்பில் இருக்கும் போது
வீடு
எப்படி இருக்கிறது
என்று அரைக்கண்ணை திறந்து
கவனிக்கிறது

கருத்துகள்

அம்பாளடியாள் இவ்வாறு கூறியுள்ளார்…
நாய்களின் நன்றி விசுவாசத்தை அழகிய கவிதையாகத்
தந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்....
மாய உலகம் இவ்வாறு கூறியுள்ளார்…
நாயின் குணத்தை நயமாக சொன்ன விதம் அற்புதம் வாழ்த்துக்கள்..
மவ்வுனம் இவ்வாறு கூறியுள்ளார்…
தன் எஜமான் மீதும் அந்த வீட்டின் மீதும் நாய்கள் வைத்திருக்கும் விசுவாசத்தை படம்பிடித்துள்ளீர்கள் வாழ்த்துகள்.மீதும் நாய்கள் வைத்திருக்கும் விசுவாசத்தை படம்பிடித்துள்ளீர்கள் வாழ்த்துகள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.