இயல் விருது பெறும் தமிழ் இலக்கியத்தின் ராக் ஸ்டார் ஷோபா சக்திக்கும், நண்பரும் கவிஞருமான குமர குருபரனுக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும். அசோகமித்திரனை வாழ்த்தும் வயது எனக்கில்லை. அவர் விருது பெறுவதில் நான் அடையும் மகிழ்ச்சியை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். அசோகமித்திரன் தனது சிறுகதையில் வரும் புலிக்கலைஞனைப் போன்றவர். ஆடி அனைவரையும் பிரமிக்க வைத்து விட்டு அமைதியாய் கைகட்டி ஓரமாய் அமர்ந்து கொள்வார். இவ்விருதையும் அவர் ஒரு சின்ன அலுப்புடன் நெற்றியை சுருக்கி ஏற்பார் என நினைக்கிறேன்.
அடுத்து...
யுவபுரஸ்கார் விருது பெறும் அன்பு நண்பர் Lakshmi Saravanakumarக்கு வாழ்த்துக்கள். கானகனை பிரசுரித்த Bala Nandakumarக்கும் என் பிரியத்தை தெரிவித்துக் கொள்கிறேன். லஷ்மியின் படைப்புகள் பற்றி விரிவாய் இந்த சந்தர்பத்தில் அலசி மதிப்பிடுவோம். லஷ்மியும் நந்துவும் நீண்ட காலம் நம் மொழிக்காய் பணியாற்ற வேண்டும். அதற்கு இவ்விருது ஒரு தூண்டுதலாய் அமையட்டும். லஷ்மியின் நூல் விமர்சனக் கூட்டமொன்றில் சில வருடங்களுக்கு முன்பு நான் சொன்னேன் "இருபது, முப்பது வருடங்களுக்கு பிறகு பலரும் கொண்டாடக் கூடிய முக்கிய எழுத்தாளராய், அன்றைய எஸ்.ராவாய் லஷ்மி இருப்பார்". அதையே இந்த சந்தர்பத்திலும் நினைவுகூர விரும்புகிறேன்.
கருத்துகள்