முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணிரத்னத்தின் திரைமொழியை விவாதிக்கும் தொடர் - 2

அர்ஜுன் (அரவிந்த் சாமி) மாவட்ட ஆட்சியாளர். மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்குத் தினம் தினம் தீர்வு காணும் ஒருவர் - மக்களோடு நெருங்கிப் பணி செய்ய வேண்டியவர். அவரை இன்னும் ஹீரோயிக்காக நிறுவியிருக்கலாமே மணிரத்னம், ஏன் இப்படி போர்வெல் போட்டு தண்ணீர் வரவழைக்கும் ஒரு அற்ப விஷயத்தைச் சாதிப்பவராய் காட்டுகிறார் என நான் இளவயதில் இந்தப் படத்தைப் பார்த்தபோது யோசித்திருக்கிறேன் (தண்ணீரைக் கொண்டுவருவது ஒரு சாதாரண விஷயம் என்றில்லை – ஒரு பேரழிவின்போது மக்களைக் காப்பாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு சந்தர்ப்பம் அல்ல இது என்கிற அளவில் சொல்கிறேன்). ஆனால், சமீபத்தில் இக்காட்சியைக் கண்டபோது எவ்வளவு கவித்துவமான நுண்ணிய காட்சி அமைப்பு இது என விளங்கியது. அர்ஜுன் என்ன மாதிரியான மனிதன் என சுலபத்தில் இந்தக் காட்சிகள் நிறுவுகின்றன - அதாவது உருவக ரீதியாய்.

ஒரு மலைப்பாங்கான இடத்திலிருந்து அர்ஜுன், தண்ணீர் இருக்கும் இடத்தைக் கணிக்கும் நிபுணர், பொதுமக்கள் ஆகியோர் இறங்கி ஒரு சமநிலத்துக்கு வருகிறார்கள். இதற்கு ஒரு low angle ஷாட். பொதுவாக இத்தகைய ஷாட்கள் பாத்திரங்களை கம்பீரமாய் காட்ட உதவும். அகிரா குரசாவோ தன் செவன் சாமுராய் படத்தில் இந்த பாணி காட்சியமைப்பைப் பயன்படுத்திய விதம் பிரசித்தமானது. அந்த உத்தியிலே அர்ஜுனைக் கம்பீரமாய் வலுவான ஓர் ஆளாய் மணிரத்னம் இக்காட்சி வழியே அறிமுகப்படுத்துகிறார்.
அடுத்து அர்ஜுனின் ஆளுமை. அர்ஜுனும் அந்த போர் போடும் எந்திரமும் ஒன்றுதான். அவன் அந்த எந்திரத்தைப் போன்றே துல்லியமாய் கச்சிதமாய் செயல்படுவான். தன் முடிவுகளில் உணர்ச்சிகள் தலையிட அனுமதிக்க மாட்டான். அர்ஜுனை வலது பக்கம் வைத்து எந்திரத்தை இடப்பக்கமாய் வைத்துச் சட்டகமாக்கும் ஷாட் இதை அபாரமாய்ச் சித்திரிக்கிறது. அர்ஜுன் அரசு இயந்திரத்தின் ஒரு செயல்திறன் மிக்க உறுப்பு. அவனது இந்த இயந்திரத்தனம் அவனை வெற்றிகரமான மனிதனாக்குகிறது; மக்கள் அவனைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இந்த குணமே அவனை வாழ்வை அதன் சிக்கல்களுடன் கவனிக்க அனுமதிக்காமல் இருக்கிறது. அவனால் சூர்யா எனும் போதாமைகளால் ஆன மனிதனை புரிந்துகொள்ள முடிவதில்லை. இது வெறுப்பாய் உருவெடுக்கிறது; அவனது வெறுப்பு அழிவுக்கு வித்திடுகிறது. எளிய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தேவராஜையும் அவனது அடியாட்களையும் அவன் அழிக்கிறான். தேவராஜின் மனைவியின் கரு கலைய மறைமுக காரணமாகிறான். மேலும் அவனது இயந்திரத்தனமான ஆவேசம் மறைமுகமாய் மற்றொரு டானான கலிவர்தனுக்கு தேவராஜைப் பழிவாங்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. இப்படி அர்ஜுனின் இந்த அடிப்படையான இயல்பு நன்மையாகவும் தீமையாகவும் பல ஜாலங்கள் காட்டத்தக்கது. இந்தச் சிக்கல்களின் விதை இந்த establishment ஷாட்களில் தெளிவாகிறது.

(மேலும் படிக்க https://www.minnambalam.com/k/2019/02/18/3)

கருத்துகள்

gomathy இவ்வாறு கூறியுள்ளார்…
தெரியாமத்தான் கேக்குறேன், இந்த பழைய பட ஆராய்சி இப்போ எதற்கு?.
அபிலாஷ் வெளியே வாங்க இந்த வட்டத்தை விட்டு.
அன்புடன்,
சு.செல்வராஜ்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...