முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணிரத்னத்தின் திரைமொழியை விவாதிக்கும் தொடர் - 2

அர்ஜுன் (அரவிந்த் சாமி) மாவட்ட ஆட்சியாளர். மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்குத் தினம் தினம் தீர்வு காணும் ஒருவர் - மக்களோடு நெருங்கிப் பணி செய்ய வேண்டியவர். அவரை இன்னும் ஹீரோயிக்காக நிறுவியிருக்கலாமே மணிரத்னம், ஏன் இப்படி போர்வெல் போட்டு தண்ணீர் வரவழைக்கும் ஒரு அற்ப விஷயத்தைச் சாதிப்பவராய் காட்டுகிறார் என நான் இளவயதில் இந்தப் படத்தைப் பார்த்தபோது யோசித்திருக்கிறேன் (தண்ணீரைக் கொண்டுவருவது ஒரு சாதாரண விஷயம் என்றில்லை – ஒரு பேரழிவின்போது மக்களைக் காப்பாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு சந்தர்ப்பம் அல்ல இது என்கிற அளவில் சொல்கிறேன்). ஆனால், சமீபத்தில் இக்காட்சியைக் கண்டபோது எவ்வளவு கவித்துவமான நுண்ணிய காட்சி அமைப்பு இது என விளங்கியது. அர்ஜுன் என்ன மாதிரியான மனிதன் என சுலபத்தில் இந்தக் காட்சிகள் நிறுவுகின்றன - அதாவது உருவக ரீதியாய்.

ஒரு மலைப்பாங்கான இடத்திலிருந்து அர்ஜுன், தண்ணீர் இருக்கும் இடத்தைக் கணிக்கும் நிபுணர், பொதுமக்கள் ஆகியோர் இறங்கி ஒரு சமநிலத்துக்கு வருகிறார்கள். இதற்கு ஒரு low angle ஷாட். பொதுவாக இத்தகைய ஷாட்கள் பாத்திரங்களை கம்பீரமாய் காட்ட உதவும். அகிரா குரசாவோ தன் செவன் சாமுராய் படத்தில் இந்த பாணி காட்சியமைப்பைப் பயன்படுத்திய விதம் பிரசித்தமானது. அந்த உத்தியிலே அர்ஜுனைக் கம்பீரமாய் வலுவான ஓர் ஆளாய் மணிரத்னம் இக்காட்சி வழியே அறிமுகப்படுத்துகிறார்.
அடுத்து அர்ஜுனின் ஆளுமை. அர்ஜுனும் அந்த போர் போடும் எந்திரமும் ஒன்றுதான். அவன் அந்த எந்திரத்தைப் போன்றே துல்லியமாய் கச்சிதமாய் செயல்படுவான். தன் முடிவுகளில் உணர்ச்சிகள் தலையிட அனுமதிக்க மாட்டான். அர்ஜுனை வலது பக்கம் வைத்து எந்திரத்தை இடப்பக்கமாய் வைத்துச் சட்டகமாக்கும் ஷாட் இதை அபாரமாய்ச் சித்திரிக்கிறது. அர்ஜுன் அரசு இயந்திரத்தின் ஒரு செயல்திறன் மிக்க உறுப்பு. அவனது இந்த இயந்திரத்தனம் அவனை வெற்றிகரமான மனிதனாக்குகிறது; மக்கள் அவனைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இந்த குணமே அவனை வாழ்வை அதன் சிக்கல்களுடன் கவனிக்க அனுமதிக்காமல் இருக்கிறது. அவனால் சூர்யா எனும் போதாமைகளால் ஆன மனிதனை புரிந்துகொள்ள முடிவதில்லை. இது வெறுப்பாய் உருவெடுக்கிறது; அவனது வெறுப்பு அழிவுக்கு வித்திடுகிறது. எளிய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தேவராஜையும் அவனது அடியாட்களையும் அவன் அழிக்கிறான். தேவராஜின் மனைவியின் கரு கலைய மறைமுக காரணமாகிறான். மேலும் அவனது இயந்திரத்தனமான ஆவேசம் மறைமுகமாய் மற்றொரு டானான கலிவர்தனுக்கு தேவராஜைப் பழிவாங்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. இப்படி அர்ஜுனின் இந்த அடிப்படையான இயல்பு நன்மையாகவும் தீமையாகவும் பல ஜாலங்கள் காட்டத்தக்கது. இந்தச் சிக்கல்களின் விதை இந்த establishment ஷாட்களில் தெளிவாகிறது.

(மேலும் படிக்க https://www.minnambalam.com/k/2019/02/18/3)

கருத்துகள்

gomathy இவ்வாறு கூறியுள்ளார்…
தெரியாமத்தான் கேக்குறேன், இந்த பழைய பட ஆராய்சி இப்போ எதற்கு?.
அபிலாஷ் வெளியே வாங்க இந்த வட்டத்தை விட்டு.
அன்புடன்,
சு.செல்வராஜ்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.