முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோயில் சொத்தும் கறுப்புப்பணமும்


திருப்பதியில் பச்சன்கள்


பத்மநாபசாமி கோயிலின் தங்க புதையல் பற்றின சர்ச்சை எழுந்த போது ஜெயமோகன் எழுதின கட்டுரை நினைவிருக்கும். இவ்வளவு தங்கமும் நிலைத்திருப்பதே ராஜகுடும்பத்தின் பொறுப்பில் இருப்பதால் தான், அரசின் வசம் சென்றிருந்தால் அரசியல்வாதிகள் முழுக்க கொள்ளையடித்திருப்பார்கள் என்றார். ஆனால் இப்போது உச்சநீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் கோயில் சொத்தை அதன் ராஜகுடும்ப பொறுப்பாளர்களே கொள்ளையடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கின் மையம் கோயில் சொத்து யார் பொறுப்பில் இருந்தால் பாதுகாப்பு எனும் கேள்வி. தனியார் வசம் இருந்தால் இன்னும் ஆபத்தானது என இப்போது தெளிவாகி உள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் கீழுள்ள ஆயிரம் கோடி சொத்துக்களையும் சரியாக கணக்கு பார்த்து கட்டுப்படுத்த இச்சந்தர்பத்தை பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக கோயிலின் கீழ் சொத்தும் பணமும் அதிகாரமும் திரள்வது நிலப்பிரபுத்துவ, மன்னராட்சி காலகட்டத்தில் துவங்கிய ஒன்று. அப்போது மன்னராட்சியும் மத நம்பிக்கையும் பிணைந்திருந்தது. மேற்கில் போப்புக்கும் இந்தியாவில் பிராமணர்களுக்கும் ஆட்சியில் “நிர்வாகமற்ற” அதிகாரம் இருந்த காலம் அது. சாணக்யன் ஆட்சியை கவிழ்த்த கதைக்கு இங்கு ஒரு காவியத்தன்மையே உள்ளது. போப்புக்கும் ஆங்கில மன்னர்களுக்கும் இடையே நிகழ்ந்த அதிகார போட்டியின் விளைவாகத் தான் புரொட்டெஸ்டண்ட் மதம் தோன்றியது. ஆனால் நாம் இன்று ஒரு மதசார்பின்மை காலகட்டத்தில் வாழ்கிறோம். இயல்பாகவே தனது அன்றாட பரிபாலனத்துக்கு அன்றி கோயிலுக்கு மிகையான பணமும் சொத்தும் அவசியம் இல்லை. துரதிஷ்டவசமாக மக்களுக்கு கோயில் மீதுள்ள செண்டிமெண்ட் காரணமாக கணிசமான சொத்துக்களை கோயிலின் பெயரில் வைதிக நிர்வாகத்தினர் ஆட்சி செய்கின்றனர். இந்த பிடி வலுவானது; சமீபத்தில் இது விடுபடாது. இது முழுக்க பணமும் அதிகாரமும் மத செண்டிமண்டால் சில குறிப்பிட்ட சாதியினரிடம் தக்க வைக்கப்படும் விவகாரம்.
பொருளாதார ரீதியில் இந்த பிரச்சனையை அணுகுவது பொதுமக்களின் புரிதலுக்கு உதவும். பத்மநாபசாமி கோயிலில் நிகழ்வது போல் ஆயிரம் கோடி சொத்து ஓரிடத்தில் பயன்பாடின்றி பதுங்குவது கள்ளச்சந்தையில் பணம் பதுங்குவதற்கு சமானம். இன்னும் சொல்லப்போனால் ஸ்விஸ் வங்கியில் கறுப்புப்பணம் தூங்குவதற்கு சமானம். பணம் புழக்கத்தில் இருக்க வேண்டும். அல்லாவிட்டால் அது பொருளாதாரத்தை மந்தமாக்கும். சமீபத்தில் பா.சிதம்பரம் மக்கள் பணத்தை தங்கத்தில் முதலீடு ஆக்குவதை விமர்சித்த்து நினைவிருக்கும். மக்களுக்கு அந்த உரிமை உண்டெனிலும் பணம் ஓரிட்த்தில் உறங்குவது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். இன்றைய பொருளாதாரப்படி பொருட்களை மக்கள் வாங்குவதில அதிகமாக செலவழிப்பது தான் வியாபாரத்தை ஊக்குவிக்கும். விளைவாக நாட்டின் ஜி.டி.பி வளரும். வேலை வாய்ப்பும் சம்பளமும் உயரும். சம்பளம் உயர நாம் பணத்தை மேலும் பொருள் வாங்குவதில் செலவழிக்க வேண்டும். இந்த சக்கர ஓட்ட்த்தில் தான் நவீன பொருளாதாரத்தின் ஜீவன் உள்ளது. ஆக பத்மநாபசாமி கோயிலின் தங்கத்தை நாம் மெட்ரோ ரயில் உருவாக்கவோ மேம்பாலம், விமானநிலையம் கட்டவோ அல்லது ஐ.டி பார்க் உருவாக்கவோ பயன்படுத்தினால் அது கேரள பொருளாதாரத்தை உயிர்ப்பிக்க கணிசமாய் உதவும்.
கோயில் சொத்தை அடுத்தவன் பயன்படுத்த விடவா என இந்துக்கள் யோசிப்பது வெறும் தட்டையான கோஷங்களுக்கே இட்டு செல்லும். இஸ்லாமியரை பாகிஸ்தானுக்கு விரட்டுவோம் என பா.ஜ.க கோருவது போலத் தான் இது. நமது பொருளாதாரமும், சமூக கலாச்சார முன்னேற்றமும் இஸ்லாமியரின் பங்களிப்புடனும் தான் நடக்கிறது. குறிப்பாய் இந்திய வணிகத்தில் அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. அவர்கள் என்ன இந்த லாபத்தை பாகிஸ்தானுக்கா அளிக்கிறார்கள்? அரபிய நாடுகளில் இருந்து கொண்டு வரும் பணத்தை அவர்கள் இந்தியாவுக்கு தானே அளிக்கிறார்கள். ஒரு தாராளவாத, ஜனநாயக சூழலில் “மற்றவன்” என்கிற வாதத்துக்கே இடமில்லை. பணம் பரிமாற்றத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் நாடு வளரும்.
கோயில் எனும் ஒற்றை மையத்தில் சொத்தையும் பணத்தையும் குவிக்கும் பழைய முறை வழக்கொழிந்து விட்டது என்பதை நாம் உணர வேண்டும். அமிதாப் பச்சன் தங்கக் கட்டிகளை திருப்பதி வெங்கடாசலபதிக்கு நன்கொடை கொடுத்தால் அதனால் அவரது குற்றவுணர்வு குறையலாம், நிம்மதி கிடைக்கலாம், மனம் ஆறலாம். ஆனால் சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை. அவரைப் போன்றவர்கள் சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கு இப்பணத்தை அளிக்கும்படியான நிர்பந்தத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். கோயில் நன்கொடைக்கு வரிவிலக்கு என்கிற சட்டத்தை மாற்ற வேண்டும். பதமநாதசாமி கோயில் பிரச்சனையை சரியாக கையாளும் நீதிமன்றம் அடுத்து இப்படியான அணுகுமுறையை அனைத்து கோயில் சொத்து விவகாரங்களுக்கும் எடுக்க வேண்டும்.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
கோவில் சொத்துக்கள் நாட்டுடைமை ஆக்கப்படவேண்டும் ,இல்லையெனில் வாரிசுகளாலும் ,அரசியல்வாதிகளாலும் கொள்ளை அடிக்கப் பட்டுவிடும் என்பதில் ஐயமில்லை !
சேக்காளி இவ்வாறு கூறியுள்ளார்…
//மெட்ரோ ரயில் உருவாக்கவோ மேம்பாலம், விமானநிலையம் கட்டவோ அல்லது ஐ.டி பார்க் உருவாக்கவோ//
வேளாண்மை தவிர்க்கப்பட்டதேனோ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.