முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நித்தியின் ரிசர்வ் வங்கியும் இந்திய கறுப்புப்பண களவாணி சட்டமும்


//There is a way out if a person wishes to legitimize his/her black money, a donation of the same to any charitable institution after cutting a deal, based on a quid pro quo, with the owner of that institution can ensure the legitimization of black money.//

(மேலும் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: http://www.legalserviceindia.com/legal/article-1070-should-india-start-taxing-the-religious-institutions.html)

இந்திய அரசியலமைப்பு சட்டம் (Sub-sections (23BBA), (23C) [v] மற்றும் Direct Taxes Code of 2009, Item No. 37 in the Seventh Schedule.) உருவாக்கப்பட்ட போது வலதுசாரிகளும் முதலாளிகளும் இணைந்து கறுப்புப் பணத்தை பாதுகாக்க உருவாக்கிய ஒரு உபாயம் தான் (அது பின்னர் இன்னும் வசதியாக விவாக்கப்பட்டது) மதநிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வரிவிலக்கு உண்டு, அதற்கு கணக்குக் காட்ட வேண்டியதில்லை, இந்த பணம் மத நிறுவனங்களுக்குள் சென்ற பிற்பாடு அதற்கு வரியில்லை என்னும் சட்டம். 

ஒரு பெருமுதலாளி / குற்றவாளி ஜக்கி, நித்தி, ஸ்ரீ ஸ்ரீ, அமிர்தானந்த மயி போன்றோரின் கையில் கொடுக்கும் கறுப்புப் பணம் இப்படி மிக பத்திரமாக இருக்கும். இந்த நிறுவனங்கள் அடிப்படையில்  மறைமுக கறுப்புப் பண வங்கிகள். மதரீதியான மக்கள் ஆதரவு, அரசியல்வாதிகளின் பினாமிகளாக செயல்படுவது போன்ற காரணிகள் இந்த கல்ட் அமைப்புகளை ரிசர்வ் வங்கியை விட, நிதி அமைச்சகத்தை விட அதிகாரமிக்க அமைப்புகள் ஆக்குகின்றன. எல்லோருடைய சிண்டுகளும் இவர்கள் வசமே இருப்பதால் ரொம்ப ரொம்ப பாதுகாப்பாக கறுப்புப் பண அறுவடையில் ஈடுபடுகிறார்கள். 
ஓஷோவில் இருந்து ஜக்கி, அமிர்தானந்த மயி, நித்தி என யாருமே பரம்பரை செல்வந்தர்கள் அல்ல, பிறப்பில் மத்திய, கீழ்மத்திய, அடித்தட்டை சேர்ந்தவர்கள். அநேகமாய் ஒன்று அல்லது இரு பத்தாண்டுகளில் அவர்களிடம் பல லட்சம் கோடி சொத்துக்கள், எந்த உழைப்போ முதலீடோ இன்றி, சேர்ந்தது இப்படித்தான். நித்தியானந்தா இன்று ரிசர்வ் வங்கி ஆரம்பித்துள்ளது புதுசல்ல, ஒவ்வொரு கார்ப்பரேட் சாமியாரும் இங்கு ரிசர்வ் வங்கிகளை எந்த சட்டத்துக்கும் உட்படாமல் நடத்தி வருகிறார்கள். நித்தி அதை மறைமுகமாய் அம்பலப்படுத்துகிறார். அதற்கு நாம் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.

கறுப்புப் பணத்தை "சிவாஜி" படத்தில் காட்டுவதைப் போன்று யாரும் கிணற்றிலோ பீரோவிலோ, "கந்தசாமியில்" காட்டப்படுவதைப் போல சொகுசுப் பேருந்திலோ ஒளித்து வைப்பதில்லை. கணிசமான கறுப்புப்பணம் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி நித்திகளிடம் பாதிக்கப்படுகிறது; சாமியார்களின் பணம் பக்தர்களின் பணம் என்பதைப் போன்ற பச்சைப் பொய் வேறில்லை. 

இந்த சட்டத்தை நித்திகளும் ஜக்கிகளும் மட்டுமல்ல கிறித்துவ, இஸ்லாமிய மத அமைப்புகளும் தாம் கறுப்புப் பண பரிவர்த்தனைக்காக பயன்படுத்துகின்றன. 

கொஞ்சமாவது சமூகப் பொறுப்புள்ள ஒரு தலைவர் இந்நாட்டில் உண்டெனில் அவர் இச்சட்டத்தை ரத்து செய்யும் முயற்சிகளை எடுக்க வேண்டும், அதைப் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும். மற்றபடி கறுப்புப்பணத்தை ஒழிக்கிறேன் என கிளம்புகிறவர்களை நம்பாதீர்கள், அவர்கள் கறுப்பாடுகள்!
இச்சட்டம் ரத்தானால் கறுப்புப் பணம் ஒழியும், ஒரு சில வருடங்களில் கார்ப்பரேட் சாமியார்கள் காணாமல் போவார்கள்!

கருத்துகள்

Aravind இவ்வாறு கூறியுள்ளார்…
கருப்புப் பணத்தை ஒழிக்க நீங்கள் சொல்வதுபோல இந்த ஓட்டைகளை அடைத்தால் அண்ணிய முதலீடுகளும் வெளியேரிவிடும் என பயமுறுத்துகிறார்கள் ஐய்யா. அது குறித்து என்ன எண்ணுகிறீர்கள்?
Murugesan இவ்வாறு கூறியுள்ளார்…
பாதிக்கப்படுகிறது; - பதுக்கப்படுகிறது;
விவாக்கப்பட்டது - விரிவாக்கப்பட்டது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...