முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நித்தியின் ரிசர்வ் வங்கியும் இந்திய கறுப்புப்பண களவாணி சட்டமும்


//There is a way out if a person wishes to legitimize his/her black money, a donation of the same to any charitable institution after cutting a deal, based on a quid pro quo, with the owner of that institution can ensure the legitimization of black money.//

(மேலும் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: http://www.legalserviceindia.com/legal/article-1070-should-india-start-taxing-the-religious-institutions.html)

இந்திய அரசியலமைப்பு சட்டம் (Sub-sections (23BBA), (23C) [v] மற்றும் Direct Taxes Code of 2009, Item No. 37 in the Seventh Schedule.) உருவாக்கப்பட்ட போது வலதுசாரிகளும் முதலாளிகளும் இணைந்து கறுப்புப் பணத்தை பாதுகாக்க உருவாக்கிய ஒரு உபாயம் தான் (அது பின்னர் இன்னும் வசதியாக விவாக்கப்பட்டது) மதநிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வரிவிலக்கு உண்டு, அதற்கு கணக்குக் காட்ட வேண்டியதில்லை, இந்த பணம் மத நிறுவனங்களுக்குள் சென்ற பிற்பாடு அதற்கு வரியில்லை என்னும் சட்டம். 

ஒரு பெருமுதலாளி / குற்றவாளி ஜக்கி, நித்தி, ஸ்ரீ ஸ்ரீ, அமிர்தானந்த மயி போன்றோரின் கையில் கொடுக்கும் கறுப்புப் பணம் இப்படி மிக பத்திரமாக இருக்கும். இந்த நிறுவனங்கள் அடிப்படையில்  மறைமுக கறுப்புப் பண வங்கிகள். மதரீதியான மக்கள் ஆதரவு, அரசியல்வாதிகளின் பினாமிகளாக செயல்படுவது போன்ற காரணிகள் இந்த கல்ட் அமைப்புகளை ரிசர்வ் வங்கியை விட, நிதி அமைச்சகத்தை விட அதிகாரமிக்க அமைப்புகள் ஆக்குகின்றன. எல்லோருடைய சிண்டுகளும் இவர்கள் வசமே இருப்பதால் ரொம்ப ரொம்ப பாதுகாப்பாக கறுப்புப் பண அறுவடையில் ஈடுபடுகிறார்கள். 
ஓஷோவில் இருந்து ஜக்கி, அமிர்தானந்த மயி, நித்தி என யாருமே பரம்பரை செல்வந்தர்கள் அல்ல, பிறப்பில் மத்திய, கீழ்மத்திய, அடித்தட்டை சேர்ந்தவர்கள். அநேகமாய் ஒன்று அல்லது இரு பத்தாண்டுகளில் அவர்களிடம் பல லட்சம் கோடி சொத்துக்கள், எந்த உழைப்போ முதலீடோ இன்றி, சேர்ந்தது இப்படித்தான். நித்தியானந்தா இன்று ரிசர்வ் வங்கி ஆரம்பித்துள்ளது புதுசல்ல, ஒவ்வொரு கார்ப்பரேட் சாமியாரும் இங்கு ரிசர்வ் வங்கிகளை எந்த சட்டத்துக்கும் உட்படாமல் நடத்தி வருகிறார்கள். நித்தி அதை மறைமுகமாய் அம்பலப்படுத்துகிறார். அதற்கு நாம் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.

கறுப்புப் பணத்தை "சிவாஜி" படத்தில் காட்டுவதைப் போன்று யாரும் கிணற்றிலோ பீரோவிலோ, "கந்தசாமியில்" காட்டப்படுவதைப் போல சொகுசுப் பேருந்திலோ ஒளித்து வைப்பதில்லை. கணிசமான கறுப்புப்பணம் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி நித்திகளிடம் பாதிக்கப்படுகிறது; சாமியார்களின் பணம் பக்தர்களின் பணம் என்பதைப் போன்ற பச்சைப் பொய் வேறில்லை. 

இந்த சட்டத்தை நித்திகளும் ஜக்கிகளும் மட்டுமல்ல கிறித்துவ, இஸ்லாமிய மத அமைப்புகளும் தாம் கறுப்புப் பண பரிவர்த்தனைக்காக பயன்படுத்துகின்றன. 

கொஞ்சமாவது சமூகப் பொறுப்புள்ள ஒரு தலைவர் இந்நாட்டில் உண்டெனில் அவர் இச்சட்டத்தை ரத்து செய்யும் முயற்சிகளை எடுக்க வேண்டும், அதைப் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும். மற்றபடி கறுப்புப்பணத்தை ஒழிக்கிறேன் என கிளம்புகிறவர்களை நம்பாதீர்கள், அவர்கள் கறுப்பாடுகள்!
இச்சட்டம் ரத்தானால் கறுப்புப் பணம் ஒழியும், ஒரு சில வருடங்களில் கார்ப்பரேட் சாமியார்கள் காணாமல் போவார்கள்!

கருத்துகள்

Aravind இவ்வாறு கூறியுள்ளார்…
கருப்புப் பணத்தை ஒழிக்க நீங்கள் சொல்வதுபோல இந்த ஓட்டைகளை அடைத்தால் அண்ணிய முதலீடுகளும் வெளியேரிவிடும் என பயமுறுத்துகிறார்கள் ஐய்யா. அது குறித்து என்ன எண்ணுகிறீர்கள்?
Murugesan இவ்வாறு கூறியுள்ளார்…
பாதிக்கப்படுகிறது; - பதுக்கப்படுகிறது;
விவாக்கப்பட்டது - விரிவாக்கப்பட்டது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...