முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழக டம்மி அரசு

  தமிழ்நாட்டு பட்ஜெட் கிட்டத்தட்ட ஒரு தேர்தல் அறிக்கையைப் போலவே உள்ளது. பல்வேறு கனவுத்திட்டங்கள், நனவுலகுக்கு வருவதற்கன நிதி ஒதுக்கீடு இல்லாத நிலை. அதுவும் முழுக்க முழுக்க சோ கால்ட் சமூக நீதித் திட்டங்களை வைத்து காதில் பூ சுற்றியிருக்கிறார். இவ்விசயத்தில் விஜய்க்கும் வேறு சில மாநில முதல்வர்களுக்கும் உள்ள ஒற்றுமையைக் குறிப்பிட வேண்டும்: சில மாநிலங்கள் மட்டுமே இன்று வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கிறார்கள். ஒன்றிய அரசு கூட சமூக நீதி எனும் பெயரில் ஏழைகளுக்கு ஆறுதல் உதவித் தொகைகளை பல்வேறு வழிகளில் கொடுத்து ஆறுதல்படுத்தவே செய்கிறது. ஏனென்றால் இன்னொரு பக்கம் பணவீக்கமும் வேலையின்மையும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. கட்சிகள் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவும் தேர்தலில் தப்பிப் பிழைக்கவும் தங்க மோதிரம் தருகிறேன், பத்து சிலிண்டர் தருகிறேன், பைக் வாங்கித் தருகிறேன் என்று என்னென்னமோ ஆசை காட்டிக் கொண்டே ஆட்சிக்கு வருகின்றன. தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளைக் கேட்டால் தலைசுற்றுகிறது. தமிழ்நாட்டுடன் பத்து மாநிலங்களின் நிதியைச் சேர்த்தால் மட்டுமே அவற்றை நிறைவேற்ற முடியும். பட்ஜெட்டிலும் இவ்வாக்குறுதிகளி...

ஜெனசிஸ்

  குத்துச்சண்டைப் பயிற்சியை கடந்த ஆண்டின் துவக்கத்தில் தொடர முடியாத நிலை அலுவலக வேலைப்பளு அதிகமானதால் ஏற்பட்டது. அதனால் வீட்டில் இருந்து பயிற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது கூட சில தவறுகள் செய்து லேசான தோள் காயம் ஏற்பட்டது; மூன்று வாரங்கள் வலது தோளை குத்துச்சண்டைக்கும் எடை தூக்கும் பயிற்சிக்கும் பயன்படுத்தக் கூடாது என்றார்கள். அதனால் நான் இடதுகையால் மட்டுமே தொடர்ந்து பயிற்சி எடுத்தேன். காயத்தில் இருந்து மீண்டு வந்த பின்னர் நான் ஒன்றைக் கற்றுக் கொண்டேன் - குத்துச்சண்டைக்காக தோளை வலுப்படுத்த தனியாகப் பயிற்சி எடுக்க வேண்டும். தினமும் அதில் கவனம் செலுத்துவது, நாவல் எழுதுவது, புது வேலை தேடுவது என என் மாலைப் பொழுதுகள் போயிற்று. பெங்களூரில் இருந்து மைசூர் வந்தபோது இங்கு நேரம் கிடைத்தாலும் சரியான பயிற்சியாளர்கள் கிடைக்க மாட்டார்களே என வருத்தமாக இருந்தது. நான் நினைத்தது சரிதான். ஒரு பக்கம், இது பயங்கரமாக இறுகிப் போன ஊர். சுலபத்தில் பயிற்சி தேடி வருவோரை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். போய்க் கேட்டுவிட்டு காத்திருக்க வேண்டும். இன்னொரு பக்கம், மைசூரில் எம்.எம்.ஏதான் பிரபலம். குத்துச்சண்டைக்கு ...

மன்னிப்பு கேள் மானிடா

  பிரதமர் மோடியின் காணொளியொன்று பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. அதில் அவர் தேர்வுத்தாள் கசிவைக் குறித்து கவலை தெரிவித்து என்னென்னமோ பேசியிருந்தார். ஒரு பக்கம் மனம் கசியப் பேசிவிட்டு இன்னொரு பக்கம் போலிசாரை விட்டு மாணவர்களை அவர் பெல்லட் குண்டு தாக்குதல், லத்தி சார்ஜ் பண்ணியதால் இந்த அணுக்கம் காட்டும் காணொளி அவரை இளைஞர்களிடம் இருந்து அகலத் துரத்தியது. அவர்கள் இவரை பயங்கரமாகக் கலாய்த்து டுரோல் பண்ண "பிராண்ட்ஸ்" எனும் அவரது அழைப்பு தேசிய கேலிச் சொல்லானது. இந்த களேபரத்துக்கு இடையில்தான் பேஸ்புக் இரவு 12: 30க்கும் காலை 5 மணிக்கும் இடையில் அவரது காணொளியைத் தூக்கியது. இது தற்செயலாக நடந்த ஒரு தொழில்நுட்பப் பிழை என்று மெட்டா நிர்வாகம் விளக்கம் அளித்தாலும் பாஜக அதை ஏற்காமல் இம்மாதம் 3ஆம் தேதி மெட்டா நிர்வாகிகளை அழைத்து இன்னும் மூன்று நாட்களுக்குள் மார்க் ஸுக்கர்பர்க் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும், இல்லாவிட்டால் பேஸ்புக்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்க்கிறார்கள். அந்த நள்ளிரவு வேளை அவரது காணொளி காணாமல் போனதால் என்ன நஷ்டம் ஏற்பட்டிருக்க முடியும்? அதை ஒரேயடியாகத் தூக...

"சின்னச் சின்ன ஆசை" எனும் கற்பனை

  நண்பர் பலரும் பேஸ்புக்கில் பாராட்டியிருந்ததைப் பார்த்துதான் இப்படத்தைப் பார்த்தேன். ஒரு விசயம் உண்மை - ரொம்ப நுட்பமான ஒரு உளவியல் அவதானிப்பை ஆண்-பெண் உறவு சார்ந்து வைத்திருக்கிறார்கள். அதேநேரம், கதைக்குள் பெரிய ஒரு ஓட்டை உள்ளது. இரண்டையும் பார்ப்போம். நாயகி 53 வயதான லீலா. எதற்காக வாழ்க்கையை வாழ்கிறோம் எனப் புரியாமல் வாழ்ந்ததன் அலுப்பும் சோகமும் ததும்ப நடக்கும் பெண். தன்னை விரும்பாத கணவன், தன்னை நேசிக்காத குடும்பம், தன் நடனத் திறனை ரசிக்காத குடும்பம் எனும் புகார்கள் கொண்ட பெண். கணவர் இறந்த பின்னும் இதையெல்லாம் தனக்குள் அடக்கி வாழும் அவருக்கு கிடைக்கும் ஒரு அண்டை வீட்டுப் பெண் வாரணாசியின் அழகை வர்ணிக்க அதைக் காணும் விருப்பத்தில் வருகிறார். இவருக்கு நேரெதிரான பாத்திரம் நாயகன் - மாதவன். இவருக்கு அவரைவிட வயது அதிகம். ஆனால் தன் மனைவியை இளம் வயதில் இழந்த துக்கத்தையும் மீறி மகிழ்ச்சியாக வாழ முயல்பவர். அவருக்குள்ளும் ஒரு பொருத்தமான காதலைப் பின்னால் காண இயலவில்லை எனும் வருத்தம் உண்டு. இருவரும் இணைவது இப்படி ஒரு தேய்வழக்கான கதையமைப்பால் உறுதிபடுத்தப்படுகிறது. இந்தக் கதையின் சிறந்த பகுதி லீல...

கொரில்லா ஆதரவாளர்கள்

  உதயநிதியைக் கண்டித்து ஏன் தவெகவினர் தமிழ்நாடு முழுக்க போராட்டங்கள் நடத்தவில்லை? ஏன் திமுகவால் முடிந்தது? தவெக அடிப்படையில் ஒரு கட்சியல்ல. அது ஒரு சற்றே பெரிய ரசிகர் மன்றம். அவர்களுடைய நோக்கம் தம் கட்சியை ஒரு மரபான கட்சியாகக் கட்டமைப்பது அல்ல. ஆகையால் அவர்கள் தெருவில் இறங்கி திரண்டு தம் குரலைப் பதிவு பண்ண மாட்டார்கள். விஜய்யின் பொதுக்கூட்டத்துக்கு கூட அந்தந்த ஊர்களில் இருந்து அல்ல வேறு ஊர்களில் இருந்தே பெருந்திரளாக பணம் கொடுத்து பார்வையாளர்களை அழைத்து வருகிறார்கள். அவர்கள் ரசிகர்களாகவும் இருக்கக் கூடும். அவர்களில் சிலர் தமக்கு உள்ளே செல்ல சீட்டுக் கிடைக்கவில்லை என்று அழுது மன்றாடியதைப் பார்த்திருக்கிறோம். டிஜிட்டல் உலகில் கூட எங்கே இருக்கிறார்கள் எனக் கண்டடைவது சிரமம். இன்ஸ்டா ஆதரவளர்கள் கூட கூலிக்கு அமர்த்தபட்டவர்களே என்கிறார்கள். திமுகவைப் போல இவர்களுக்கு நேரடி அரசியலில் நம்பிக்கையோ விருப்பமோ இல்லை. இவர்கள் அதற்குப் பதில் ஏற்கனவே நேரடி அரசியலில் இருக்கிற மாற்றுக் கட்சிக்காரர்களை தம் கட்சிக்குள் இழுத்து தேர்தலில் இடமளித்து பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளை இக்கட்சி ஒரு...

ஸோம்பியாதல்

  எனக்கு வாழும் ஆசை இருக்குமளவுக்கு இப்போதெல்லாம் வாழாதிருக்கும் ஆசையும் சரிசமமாக இருக்கிறது - வாழாதிருப்பது குறித்த பயமும் இருக்கிறது. இது என்னை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்துகிறது. முன்பு எனக்கு நிறைய தெளிவும் நம்பிக்கையும் இருந்தது. அடுத்தடுத்து எதையாவது புதிதாகச் செய்யவும் என்னை மாற்றிக் கொள்ளவும் முடிந்தது. நான் என்னையே கண்டுபிடித்துக் கொண்டும் இருந்தேன். இப்போது எழுத்தில் தவிர வெளியே அது சாத்தியப்படுவதில்லை. வெளியுலகம் ஸ்தம்பித்ததைப் போலிருக்கிறது. அட, எனக்கு மட்டும்தான் என்றால் பலருக்கும் அப்படித்தான் இருக்கிறது. வாழும் இன்பம், எழுதும் இன்பம் எப்போதும் உள்ளதைப் போல இப்போதும் இருக்கிறது. ஆனால் எதுவோ ஒன்று விட்டுப் போனதைப் போல இருக்கிறது. அதனாலே ஒரு அசட்டு தைரியம். கண்ணில்லாதவர் அங்குமிங்கும் நடப்பதைப் போல. அண்மையில் ஒரு நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கு அவரை ஒட்டி ஒரு பெரிய பிரச்சினை வெடித்திருந்தது. அவருக்கு அந்த வலியைப் பொறுக்க முடியாமல் உடல் முடியாது போய்விட்டது. எனக்கு அதைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது - என்னால் யாரை வைத்தும் பிரச்சினையை உண்டு பண்ண முடிவதில்லை. எனக்...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...